மேலும் அறிய

பழிக்குப் பழி, நீண்ட நாள் பகை, திட்டம் தீட்டி கொலை செய்தோம் - திருச்சியில் கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழிக்குப்பழி கொலை சம்பவம் - குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர்.முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், இவரது மனைவி கயல்விழி சேகர். கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது மகன் முத்துக்குமார் (32). இவர் பிபிஏ படித்துவிட்டு தொழிலை கவனித்து வந்தார். இதற்கிடையே பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக கேபிள் சேகர் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்தது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் சேகரை பெரியசாமியின் மகன் சிலம்பரசன் வெட்டி கொலை செய்தார். அதன் பின்னர் கடந்த 2021ல் பழிக்கு பழியாக சிலம்பரசனை, கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் தரப்பினர் வெட்டி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த முன் விரோதத்தில் சிலம்பரசனின் தம்பி லோகநாதன், முத்துக்குமாரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி வந்தார்.

இந்த நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பழிக்குப் பழி, நீண்ட நாள் பகை, திட்டம் தீட்டி கொலை செய்தோம் -  திருச்சியில் கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியை அதிர வைத்த கொலை வழக்கில் 5 பேர் கைது

மேலும் இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் லோகநாதன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான லோகநாதனை நள்ளிரவு கைது செய்தனர். அதன் பின்னர் அவரது கூட்டாளிகள் அரியமங்கலம் அம்பிகா புரத்தைச் சேர்ந்த குமரேசன் (24), இளஞ்செழியன் ( 24), தினேஷ் என்கிற கூல் தினேஷ் ( 24), பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி (37) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பிச்சென்ற ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதான லோகநாதன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை பெரியசாமி அதிக அளவு பன்றி வளர்த்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் தொழில் முழுவதும் எனது சித்தப்பா கேபிள் சேகர் கைக்கு சென்றது. அவர் அந்த வருமானத்தை தனது மனைவி குழந்தைகளுக்கு செலவழித்து வசதியாக வாழ வைத்தார். நான் மட்டும் இல்லாமல் எனது சகோதரர்கள் தங்கமணி, சிலம்பரசன், ஆகியோர் உள்ளூர் மாநகராட்சி பள்ளிகளில் படித்தனர். ஆனால் சித்தப்பாவின் மகன் மகள்கள் ஊட்டி தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தனர்.


பழிக்குப் பழி, நீண்ட நாள் பகை, திட்டம் தீட்டி கொலை செய்தோம் -  திருச்சியில் கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

நீண்ட நாள் பகை, தீர்த்து கட்டினோம் பரபரப்பு வாக்குமூலம்

மேலும், இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. பின்னர் எங்கள் அண்ணன் சிலம்பரசன் வளர்ந்து ஆளாகிய பின்னர் சொத்தை பிரித்து தருமாறு கேட்டோம். அதற்கு கேபிள் சேகர் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அவரை கொலை செய்தோம்.இந்த முன் விரோதத்தில் எனது அண்ணன் சிலம்பரசனை முத்துக்குமார் கொலை செய்தார். பின்னர் முத்துக்குமாரை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து வந்தோம். திட்டமிட்டபடி நேற்று நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டினோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருச்சி அரியமங்கலத்தில் முன்னாள் கவுன்சிலர் மகன் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காட்சியானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியான லோக என்கின்ற லோகநாதன் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தில் விழுந்ததால் கணுக்காலில் முடிவு ஏற்பட்டுள்ளது.  அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தில் விழுந்ததால் கணுக்காலில் முடிவு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
கிளாம்பாக்கம் தலைவலிக்கு முற்றுப்புள்ளி! ரூ.100 கோடியில் ஆகாய நடைபாதை! தேதி குறித்த அதிகாரிகள்!
கிளாம்பாக்கம் தலைவலிக்கு முற்றுப்புள்ளி! ரூ.100 கோடியில் ஆகாய நடைபாதை! தேதி குறித்த அதிகாரிகள்!
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Trump on Putin: “நல்லா தான் பேசுறாரு, ஆனா சாய்ந்தரம் எல்லார் மேலயும் குண்டு போட்டுட்றாரு“ - ட்ரம்ப் கூறியது யாரை.?
“நல்லா தான் பேசுறாரு, ஆனா சாய்ந்தரம் எல்லார் மேலயும் குண்டு போட்டுட்றாரு“ - ட்ரம்ப் கூறியது யாரை.?
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’  பரபரப்பு Press Meet!
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!
Embed widget