மேலும் அறிய

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் - சுப. வீரபாண்டியன்

நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என கூறும் பிரதமரை இனி பிரதமராக வைத்திருக்க மாட்டோம் என நாடு முடிவு செய்யும் - சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலைஆய்வாளர்கள்) சங்கத்தின் 4வது மாநில மாநாடு நடைபெற்றது. தங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் அந்த மாநாடு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் இருந்து சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டு கருத்தரங்கில்  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த மாநாட்டில் தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு(ri), இளநிலை வரைதொழில் அலுவலர்(Jdo) என பதவி உயர்வு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்களை நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். 2022- 2023ஆம் ஆண்டு வரை காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி பதவி உயர்வு வழங்கி உடனடியாக நிரப்ப வேண்டும். சாலைகளின் நீளத்தின் தன்மைக்கு ஏற்ப சாலைப்பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் நிலை – 2ல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் - சுப. வீரபாண்டியன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப.வீரப்பாண்டியன் கூறியது.. திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கையில் தான் இது போன்ற மாநாடுகளை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்களை போன்றோர் துணை நிற்போம். நியாயமான கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். எப்போதும்  எந்த ஒரு ஆபத்தையும் எதிர்நோக்கி தான் இருக்கும் என்பது இயற்கையின் இயல்பு. தமிழ்நாட்டில் மதவாதம், மனு நீதி காலூன்ற முயற்சி செய்கிறது. ஆனால் சமூக நீதி இருக்கும் வரையில் மனு நீதி தமிழ்நாட்டிற்குள் வராது எனவே நாம் சமூக நீதியை காக்க மனுநீதியை மறுதழிக்க வேண்டியது கட்டாயம் இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டங்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்துள்ளார்கள். ஈழப்போராட்டம் நடந்த காலக்கட்டங்களில் அது குறித்து சீமான் பேசியதில்லை அது முடிந்த பின்பு தான் அது குறித்து பேசி வருகிறார். ஆனால் ஈழப்போராட்டத்திற்காக அந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே முதன் முதலாக தன் உயிரை விட்டவர் அப்துல் ரவூஃப் என்கிற இஸ்லாமியர் தான்.


ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் - சுப. வீரபாண்டியன்

இந்திய விடுதலை போராட்டத்திலிருந்து அவர்கள் எல்லா போராட்டங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள். அரசியலில் எந்த கருத்தை வேண்டுமானால் பேசலாம் ஆனால் நாகரீகமாக பேச வேண்டும். சிறுபான்மை என்று சொன்னால் செறுப்பால் அடிப்பேன் என கூறுவதெல்லாம் அநாகரிகத்தின் உச்சம்.  இந்திய அரசியமைப்பு சட்டமே இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று தான் கூறுகிறது. அண்ணாமலை நடைபயணத்தை ஏற்கனவே ரத்து செய்து விட்டு பெரும்பாலும் வேனில் தான் பயணிக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக கூறுகிறார்கள். அவர் அங்கு போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். வேறு எந்த இடத்தையும் விட தமிழ்நாடு தான் சரியான தீர்ப்பளிக்கும். யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம் ஆனால் மக்கள் சரியாக தான் வாக்களிப்பார்கள். வட நாட்டிலேயே மோடியால் வெற்றி பெற முடியுமா என தெரியவில்லை தமிழ்நாட்டில் அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வாரணாசியில் போட்டியிட்ட அவர் அடுத்து ராமேஸ்வரம் வருவதாக கூறுகிறார்கள். அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மீண்டும் குஜராத்துக்கு தான் செல்வார்.  25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. தி.மு.க உடன் இணக்கமாக இருந்தாலும் நியாமான கோரிக்கைகளை அரசிடம் மிக அழுத்தமாக முன் வைப்போம். இதற்காக சிறுபான்மையினர் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிப்போம். நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என கூறும் பிரதமரை இனி பிரதமராக வைத்திருக்க மாட்டோம் என நாடு முடிவு செய்யும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget