மேலும் அறிய

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் - சுப. வீரபாண்டியன்

நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என கூறும் பிரதமரை இனி பிரதமராக வைத்திருக்க மாட்டோம் என நாடு முடிவு செய்யும் - சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலைஆய்வாளர்கள்) சங்கத்தின் 4வது மாநில மாநாடு நடைபெற்றது. தங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் அந்த மாநாடு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் இருந்து சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டு கருத்தரங்கில்  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த மாநாட்டில் தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு(ri), இளநிலை வரைதொழில் அலுவலர்(Jdo) என பதவி உயர்வு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்களை நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். 2022- 2023ஆம் ஆண்டு வரை காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி பதவி உயர்வு வழங்கி உடனடியாக நிரப்ப வேண்டும். சாலைகளின் நீளத்தின் தன்மைக்கு ஏற்ப சாலைப்பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் நிலை – 2ல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் - சுப. வீரபாண்டியன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப.வீரப்பாண்டியன் கூறியது.. திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கையில் தான் இது போன்ற மாநாடுகளை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்களை போன்றோர் துணை நிற்போம். நியாயமான கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். எப்போதும்  எந்த ஒரு ஆபத்தையும் எதிர்நோக்கி தான் இருக்கும் என்பது இயற்கையின் இயல்பு. தமிழ்நாட்டில் மதவாதம், மனு நீதி காலூன்ற முயற்சி செய்கிறது. ஆனால் சமூக நீதி இருக்கும் வரையில் மனு நீதி தமிழ்நாட்டிற்குள் வராது எனவே நாம் சமூக நீதியை காக்க மனுநீதியை மறுதழிக்க வேண்டியது கட்டாயம் இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டங்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்துள்ளார்கள். ஈழப்போராட்டம் நடந்த காலக்கட்டங்களில் அது குறித்து சீமான் பேசியதில்லை அது முடிந்த பின்பு தான் அது குறித்து பேசி வருகிறார். ஆனால் ஈழப்போராட்டத்திற்காக அந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே முதன் முதலாக தன் உயிரை விட்டவர் அப்துல் ரவூஃப் என்கிற இஸ்லாமியர் தான்.


ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் - சுப. வீரபாண்டியன்

இந்திய விடுதலை போராட்டத்திலிருந்து அவர்கள் எல்லா போராட்டங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள். அரசியலில் எந்த கருத்தை வேண்டுமானால் பேசலாம் ஆனால் நாகரீகமாக பேச வேண்டும். சிறுபான்மை என்று சொன்னால் செறுப்பால் அடிப்பேன் என கூறுவதெல்லாம் அநாகரிகத்தின் உச்சம்.  இந்திய அரசியமைப்பு சட்டமே இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று தான் கூறுகிறது. அண்ணாமலை நடைபயணத்தை ஏற்கனவே ரத்து செய்து விட்டு பெரும்பாலும் வேனில் தான் பயணிக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக கூறுகிறார்கள். அவர் அங்கு போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். வேறு எந்த இடத்தையும் விட தமிழ்நாடு தான் சரியான தீர்ப்பளிக்கும். யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம் ஆனால் மக்கள் சரியாக தான் வாக்களிப்பார்கள். வட நாட்டிலேயே மோடியால் வெற்றி பெற முடியுமா என தெரியவில்லை தமிழ்நாட்டில் அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வாரணாசியில் போட்டியிட்ட அவர் அடுத்து ராமேஸ்வரம் வருவதாக கூறுகிறார்கள். அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மீண்டும் குஜராத்துக்கு தான் செல்வார்.  25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. தி.மு.க உடன் இணக்கமாக இருந்தாலும் நியாமான கோரிக்கைகளை அரசிடம் மிக அழுத்தமாக முன் வைப்போம். இதற்காக சிறுபான்மையினர் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிப்போம். நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என கூறும் பிரதமரை இனி பிரதமராக வைத்திருக்க மாட்டோம் என நாடு முடிவு செய்யும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget