மேலும் அறிய

மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மகளிர் சுய உதவி குழுக்களில் உருவாகும் பொருட்களை இ - காமர்ஸ் முறையில் சந்தைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்  உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளர்களின்  வெற்றி புத்தகத்தையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் உற்பத்தியாள்ர், சந்தையாளர் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது.  இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "பெரியார் 1929 ஆம் ஆண்டு நமது முன்னேற்றம் என்கிற கட்டுரை எழுதினார். அதில் நம் நாட்டவருக்கும் மேலை நாட்டவருக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என எழுதினார். குறிப்பாக பொருளாதாரத்தில் நாம் எந்த அளவு பின் தங்கி உள்ளோம் என வேதனையை பதிவு செய்துள்ளார். பெரியாரின் கொள்கையை சட்டமாக்கியவர் கலைஞர். கலைஞர் மகளிர் சுய உதவி குழுவை உருவாக்கி மகளிர் மேம்பாட்டுக்கு வழி வகுத்தார். இந்த துறை உதயநிதிக்கு ஒப்படைக்கப்பட்ட பின் பல முன்னேற்றங்கள் நடந்தது. வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். சமுதாய ஏற்றுத்தாழ்வு கலையப்பட வேண்டும் என நம் முதலமைச்சர் சிந்தித்து செயல்பட்டு வருகிறார்.


மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

குறிப்பாக 1989 ஆம் ஆண்டு சுய உதவி குழுக்களை கலைஞர் உருவாக்கினார். அதை துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் விரிவுப்படுத்தினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் மேலும் அதை விரிவுப்படுத்துவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.  இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  "பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என பெரியார் கூறி உள்ளார். அதனடிப்படையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் 1989 ஆம் ஆண்டு தொடங்கினார். அன்று தர்மபுரியில் தொடங்கப்பட்ட இந்த சுய உதவி குழு இன்று தமிழ்நாடு முழுவதும் 7,22,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் அமைதியாக தொழில்புரட்சியை செய்து வருகிறது. நான் யாருக்கு பரிசு அளிப்பதாக இருந்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் வழங்குவேன். எனக்கு பரிசுகள் வழங்குபவர்களிடமும் அந்த பொருட்களை வழங்க வேண்டும் என் வேண்டுகோளை வைத்துள்ளேன். பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களின் மீது இருக்கும் நம்பிக்கையை விட மகளிர் சுய உதவி குழுக்கள் மீது  மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.


மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கும். மகளிர் சுய உதவி குழுக்கள் தற்போது கடன் உதவி பெரும் நிலையிலிருந்து பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் என்கிற நிலையை அடைந்துள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களில் உருவாக்கும் பொருட்களை இ - காமர்ஸ் முறையில் சந்தைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடங்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கோரிக்கை வைத்துள்ளார் அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும்" என்றார். நிகழ்ச்சிக்கு முன்னதாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.  இந்நிகழ்வில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர்  திவ்யதர்ஷினி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலாக்க அலுவலர்  பத்மஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள்,பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget