மேலும் அறிய

திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் இருந்து இதுவரை 21 லட்சம் அபராதம் வசூல்

திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு அமல்படுத்தபட்ட ஊரடங்கில் விதிகளை மீறியதாக இதுவரை சுமார் ரூபாய் 21 லட்சம் அபராதம் வசூல் செய்யபட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஓமிக்ரான் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தொடக்கத்தில் இருந்தே அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவலை  கட்டுப்படுத்த  தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு  அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில்  திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் திருச்சி மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 சோதனை சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்தியபேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், TVS டோல்கேட், மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.


திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் இருந்து இதுவரை 21 லட்சம் அபராதம் வசூல்

மேலும் ஊரடங்கு நேரத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து. முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றிதிரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் மாநகரில் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகள் அருகில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், விதிகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மாநகரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவையற்ற காரணங்களை கூறிக்கொண்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், மீறினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்  என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்தனர். மேலும் திருச்சி மாநகரத்தில் ஊரடங்கு நேரத்தில் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.


திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் இருந்து இதுவரை 21 லட்சம் அபராதம் வசூல்

தமிழகத்தில் விதிக்கபட்டுள்ள ஊரடங்கை மீறினால் நடவடிக்கை எடுக்கபடும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 06.01.2022 தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து முககவசம் அணியாமல் வந்த 9734 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19,46,800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது. குறிப்பாக  சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைத்திருந்த நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை  சுமார் ரூ.21 இலட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்கண்ட முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவமனைகள், பால் விநியோகம், மற்றும் மருந்தகங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. மேலும் ஊரடங்கு நேரங்களில் அரசுக்கும், காவல்துறைக்கும் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget