அடி தூள்... ECR டூ OMR... இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
ECR மற்றும் OMR பகுதியில் அதிகளவிலான ஐடி தொழில் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் 204 கோடியில் இரும்பு மேம்பாலம் அமைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ECR முதல் OMR வரை இரும்பு மேம்பாலம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை திட்டங்களும் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4 வழி சாலைத்திட்டம், 6 வழிச்சாலை திட்டம், 8 வழிச்சாலை திட்டம் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல மணி நேரம் பயணிக்க வேண்டிய இடத்திற்கு சில மணி நேரங்களில் செல்ல முடிகிறது. இந்த நிலையில் ECR மற்றும் OMR ஐ இணைக்கும் வகையில் 204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் குறிப்பாக ECR மற்றும் OMR பகுதியில் அதிகளவிலான ஐடி தொழில் நிறுவனங்கள் உள்ளது.பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தங்களது அலுவலகங்களுக்கு செல்ல பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலையில் தற்போது சூப்பரான திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலைத் துறை, நீலாங்கரையில் உள்ள பகிங்காம் கால்வாயைக் கடந்து புதிய பாலம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி உள்ளது. இதனையடுத்து தான் டலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம்
பல்லாவரம் 200 அடி ரேடியல் ரோடு–OMR சந்திப்பிலிருந்து ஆரம்பமாகி, நீளங்கரையில் உள்ள ECR-ல் முடிவடையும்.ECR மற்றும் OMR ஐ இணைக்கும் வகையில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் 0.8 கிலோமீட்டர் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இணைப்புச்சாலை உருவாக்கத்தின் மூலம் ராஜிவ்காந்தி சாலை, ஓ எம் ஆர் மற்றும் இ சி ஆர் சாலைகளுக்கு நேரடியான இணைப்பு கிடைக்கும்.
30.5 மீட்டர் பரப்பளவு ரைட் ஆப் வே (RoW) உடன் 1.465 கிலோமீட்டர் நீளத்தில் உருவாகும் இந்த இணைப்பு சாலை, சென்னை தென் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் குறையும்
“இந்த இணைப்பு சாலை, ECR வழிப்பட்ட மக்களுக்கு நகரிற்குள் குறைந்த தூரத்தில் சென்று சேர உதவும். அதேசமயம் சோழிங்கநல்லூர், திருவான்மியூர் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த திட்டம் முடிவடைந்தவடன் OMR–பல்லாவரம் தோராய்ப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பில் 40% போக்குவரத்து மாற்றம் ஏற்படும்” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.
நீர்வழியை கடக்கும் பாலம்
பகிங்காம் கால்வாயைக் கடக்கும் பாலம் 96 மீட்டர் நீளமாக அமைக்கப்பட உள்ளது. 32 மீட்டர் நீளமுள்ள மூன்று பீம்கள் கொண்டு உருவாக்கப்படும். அணுகுமுறைச் சாலைகளையும் சேர்த்து மொத்த நீளம் 376 மீட்டர், சாலை அகலம் 27.7 மீட்டராக இருக்கும்.





















