மேலும் அறிய

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 160 கோடி கடன்களை வாங்கியுள்ள விவசாயிகள்

குறுவை சாகுபடிக்காக இதுவரை 160 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை  மேற்கொள்ள விவசாயிகளுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  குறிப்பாக குறுவை சாகுபடிக்கு தேவையான பயிர் கடன் மற்றும் மானிய விலையில் உரங்கள் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சிறு, குறு விவசாயிகள் யார் கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு பயிர் கடன் வழங்க தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிம் தற்போது வரை 160 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 160 கோடி கடன்களை வாங்கியுள்ள விவசாயிகள்

 

திருச்சி மாவட்டத்தில் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு 35 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதே போல் நடப்பாண்டு 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூபாய் 40 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆயிரத்து 491 பேர்களுக்கு ரூபாய் 11.59 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் குழுவில் குறுவை, உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கடன் வழங்கப்பட்டுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள 147 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு ரூபாய் 400 கோடி பயிர் கடன் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு 440 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டை காட்டிலும் 40 கோடி ரூபாய் அதிகம். 


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 160 கோடி கடன்களை வாங்கியுள்ள விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவையில் இதுவரை 33 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்  27ஆம் தேதி வரை 4,405 விவசாயிகளுக்கு 33.40 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 2,719 விவசாயிகளுக்கு குறுவையில் பயிர் கடனாக ரூபாய் 20.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு 314 கோடியே 50 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி வரை 15 கோடியே 67 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 691 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 160 கோடி கடன்களை வாங்கியுள்ள விவசாயிகள்

 

நாகை மாவட்டத்தில் 57 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்த வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் குறுவை பயிர்கடன் 5,000 விவசாயிகளுக்கு 122.50 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 97.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7,328 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, என்ற மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு விவசாய கடன் வழங்க தமிழக அரசு 111 கோடி ஒதுக்கீடு உள்ளது. இதுவரை மயிலாடுதுறை பகுதியில் 1,129 விவசாயிகளுக்கு 6.65 கோடி, தரங்கம்பாடி பகுதியில் 143 விவசாயிகளுக்கு 1.31 கோடியும், சீர்காழி பகுதியில் 316 விவசாயிகளுக்கு ரூபாய் 2.44 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget