மேலும் அறிய

பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45 வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 670221 இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது. 


பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர்  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இந்நிலையில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 9 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 45 பேர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் 19,929 பேர்கள், இதில் குணமடைந்தோர் 19622 பேர்கள், இறந்தவர்கள் 267 பேர்கள் ஆகும். இந்நிலையில் மருத்துவமனை, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு 40 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். 


பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர்  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் முக கவசங்களை பொதுமக்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். மேலும்  பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், திருமணம், இறப்பு நிகழ்வுகளில்  குறைந்த அளவு மக்கள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முக கவசங்கள் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும்,  அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nallathambi Letter: என்ன நீக்குறீங்களா, நானே விலகவா.? பிரேமலதாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கடிதம்...
என்ன நீக்குறீங்களா, நானே விலகவா.? பிரேமலதாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கடிதம்...
Pakistan ISI: பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
Police Constable Punished: வேலை இங்க, விஸ்வாசம் அங்கயா.? விஜய்யை பார்க்கப்போன கான்ஸ்டபிளுக்கு கிடைத்த கூலி...
வேலை இங்க, விஸ்வாசம் அங்கயா.? விஜய்யை பார்க்கப்போன கான்ஸ்டபிளுக்கு கிடைத்த கூலி...
India Fighter Jet: இரவிலும் தொடர்ந்த பயிற்சி.. எக்ஸ்பிரஸ் வேயில் போர் விமானத்தை தரையிறக்கி இந்தியா ஒத்திகை.. பதற்றம்
இரவிலும் தொடர்ந்த பயிற்சி.. எக்ஸ்பிரஸ் வேயில் போர் விமானத்தை தரையிறக்கி இந்தியா ஒத்திகை.. பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ராகுல் காந்தியின் அஸ்திரம்! காலி செய்த மோடி! பாஜக போட்ட ஸ்கெட்ச்”மோடி ஜி போராளி! அவர் மேல நம்பிக்கை இருக்கு” பாராட்டி தள்ளிய ரஜினிCongress vs dmk: வார்த்தையை விட்ட காங்கிரஸ்! ஸ்டாலின் செய்த சம்பவம்! சீனுக்கு வந்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nallathambi Letter: என்ன நீக்குறீங்களா, நானே விலகவா.? பிரேமலதாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கடிதம்...
என்ன நீக்குறீங்களா, நானே விலகவா.? பிரேமலதாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கடிதம்...
Pakistan ISI: பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
Police Constable Punished: வேலை இங்க, விஸ்வாசம் அங்கயா.? விஜய்யை பார்க்கப்போன கான்ஸ்டபிளுக்கு கிடைத்த கூலி...
வேலை இங்க, விஸ்வாசம் அங்கயா.? விஜய்யை பார்க்கப்போன கான்ஸ்டபிளுக்கு கிடைத்த கூலி...
India Fighter Jet: இரவிலும் தொடர்ந்த பயிற்சி.. எக்ஸ்பிரஸ் வேயில் போர் விமானத்தை தரையிறக்கி இந்தியா ஒத்திகை.. பதற்றம்
இரவிலும் தொடர்ந்த பயிற்சி.. எக்ஸ்பிரஸ் வேயில் போர் விமானத்தை தரையிறக்கி இந்தியா ஒத்திகை.. பதற்றம்
LIVE | Kerala Lottery Result Today(03 05 2025): யாருக்கு கருணை காட்டப்போகிறது காருண்யா லாட்டரி? வெற்றியாளர் பட்டியலை பாருங்கள்!
LIVE | Kerala Lottery Result Today(03 05 2025): யாருக்கு கருணை காட்டப்போகிறது காருண்யா லாட்டரி? வெற்றியாளர் பட்டியலை பாருங்கள்!
Goa Stampede: என்ன கொடுமை இது.. கோவாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி...
என்ன கொடுமை இது.. கோவாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி...
சிபிஎஸ்இ ஃபெயில் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார் தெரியுமா?
சிபிஎஸ்இ ஃபெயில் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார் தெரியுமா?
IPL 2025 SRH vs GT: குஜராத் குதூகல வெற்றி.. மரண அடி வாங்கிய சன்ரைசர்ஸ்! கில் பாய்சும் ப்ளே ஆஃப்க்கு ரெடி
IPL 2025 SRH vs GT: குஜராத் குதூகல வெற்றி.. மரண அடி வாங்கிய சன்ரைசர்ஸ்! கில் பாய்சும் ப்ளே ஆஃப்க்கு ரெடி
Embed widget