மேலும் அறிய

பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45 வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 670221 இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது. 


பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இந்நிலையில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 9 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 45 பேர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் 19,929 பேர்கள், இதில் குணமடைந்தோர் 19622 பேர்கள், இறந்தவர்கள் 267 பேர்கள் ஆகும். இந்நிலையில் மருத்துவமனை, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு 40 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். 


பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் முக கவசங்களை பொதுமக்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். மேலும்  பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், திருமணம், இறப்பு நிகழ்வுகளில்  குறைந்த அளவு மக்கள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முக கவசங்கள் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும்,  அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (06-06-2026) எங்கெல்லாம் மின் தடை? - ஏரியாக்களின் லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை எங்கெல்லாம் மின் தடை? - ஏரியாக்களின் லிஸ்ட் இதோ
மக்களின் வரிப்பணம் வீணாகிறதா? திருச்சி உறையூரில் முடங்கிக்கிடக்கும் நவீன சந்தை வளாகம்
மக்களின் வரிப்பணம் வீணாகிறதா? திருச்சி உறையூரில் முடங்கிக்கிடக்கும் நவீன சந்தை வளாகம்
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget