மேலும் அறிய

திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை

திருச்சி மாவட்டத்தில் 24 குரங்குகள், 12 நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று வீசிய மர்ம நபர்களை  காவல்துறையினர்  தேடி வருகின்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அடுத்த  நெடுங்கனூர் காட்டுப்பகுதியை ஒட்டிய சாலையோரம் நேற்று காலை ஏராளமான  குரங்குகள் இறந்து கிடப்பதாக திருச்சி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல்  கிடைத்தது. திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்  பேரில் வன சரகர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 6 பெண்  குரங்குகள் மற்றும் 18 ஆண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்து கிடந்தது.  இறந்து கிடந்த  குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி  வைத்தனர். மேலும் விசாரணையில் எங்கோ ஒரு பகுதியில் விஷமிகள் குரங்குகளுக்கு  விஷம் வைத்து கொன்று அதனை இந்த பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  வழக்கு பதிந்த வன பாதுகாப்பு அதிகாரிகள், குரங்கிற்கு விஷம் வைத்து கொன்றது  யார் என்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடி மற்றும்  சாலையோர கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை

இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட துரைசாமிபுரம் மரியம் நகர் பகுதியில்  திடீரென மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்து கிடந்தது குறித்து மரியம் நகர் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இறந்து கிடந்த நாய்களை  ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்திற்கு எடுத்துச்சென்றனர். அப்போது ஆய்வில் நாய்களுக்கு விஷம் நிறைந்த உணவு பொருட்களை கொடுத்து கொன்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக திருச்சி துரைசாமிபுரம் மரிய நகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதி மிகவும் அமைதியான பகுதியாக விளங்கி வருகிறது. மேலும் இங்கு  இருப்பவர்கள் அனைவருமே வசதி படைத்தவர்கள் என்றனர்.
 

திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை
 
மேலும் எங்கள் வீடுகளில் மிஞ்சுகின்ற உணவு பொருட்களை வீணாக்காமல், தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு அளித்து அதனை பாதுகாத்து வருகிறோம். கடந்த சில நாட்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து வருகிறது. இதுபற்றி நாங்கள்  மாநகராட்சி அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம் என்றனர். இதை கொள்ளையர்களின் கைவரிசையாகவே நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் எங்கள் பகுதிகளில் இரவு நேரத்தில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிவதால் இதுவரை கொள்ளை சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆகவே மர்ம நபர்கள் நாய்கள் இருந்தால் தொல்லை என்று கருதி நாய்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவே நினைக்கிறோம். ஆகவே காவல்துறையினர் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget