![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை
திருச்சி மாவட்டத்தில் 24 குரங்குகள், 12 நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அடுத்த நெடுங்கனூர் காட்டுப்பகுதியை ஒட்டிய சாலையோரம் நேற்று காலை ஏராளமான குரங்குகள் இறந்து கிடப்பதாக திருச்சி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில் வன சரகர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 6 பெண் குரங்குகள் மற்றும் 18 ஆண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்து கிடந்தது. இறந்து கிடந்த குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் எங்கோ ஒரு பகுதியில் விஷமிகள் குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று அதனை இந்த பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த வன பாதுகாப்பு அதிகாரிகள், குரங்கிற்கு விஷம் வைத்து கொன்றது யார் என்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடி மற்றும் சாலையோர கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)