மேலும் அறிய

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டும் திருச்சி மக்கள்...!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை இதுவரை 12,98,671 பேர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால்   50 முதல் 60 வரை நபர்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, அதன்படி மாவட்ட முழுவதும் தினமும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ  முகாம்ககளை அமைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இதன்படி  திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் 22 லட்சத்து 82 ஆயிரத்து 552 பேர்கள் ஆகும், இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களில் சுகாதாரத் துறை பணியாளர்கள் 22,718 பேர்களும், முன் களப்பணியாளர்கள் 22,652 பேர்களும், பொதுமக்கள் 7,30,953 பேர்களும், மற்றும் பணியாளர்கள் 2,40,648 பேர்கள் என  10 லட்சத்து 16 ஆயிரத்து 966 பேர்கள், செலுத்தி கொண்டுள்ளனர். இதே போன்று இரண்டு தவனை தடுப்பூசிகளை  2 லட்சத்து 81 ஆயிரத்து 705 பேர்கள் என மொத்தம் 12 லட்சத்து 98 ஆயிரத்து 671 பேர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டும் திருச்சி மக்கள்...!

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கை  நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுபாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து. வருகிறது, குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆகையால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரபடுத்தி உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், எனவும் மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், திருச்சியை பொறுத்தவரை பல இடங்களில் மக்கள் முகக் கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக இயல்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அரசு கூறிய  விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், முகக் கவசங்கள் அணிவது நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு ஒரு முக்கிய செயலாகும். அதே போன்று நம்மை சுற்றி உள்ளவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதும் மட்டும் அல்ல  குடும்பத்தை காத்துக்கொள்வதும் நமது கையில்தான் இருக்கிறது, எனவே  பொதுமக்கள் அலட்சிய போக்கில் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டும் திருச்சி மக்கள்...!

கொரோனா பரவாமல் இருப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது, அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலுமாக மீளவேண்டும் என்றால் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அதே போன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும், மக்களை காப்பாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஆகையால்  மக்கள்  முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருமே தடுப்பூசிகள் செலுத்திகொள்ள வேண்டும். சிலர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயங்குகிறார்கள் தயக்கம் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் அரசு கூறிய விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget