மேலும் அறிய

திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

திருச்சி மாவட்டம் அருகே பெரிய சூரியூரில் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரழப்பு,

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது. மாட்டு பொங்கல் தினமான நேற்று திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முதலாவது போட்டியாக ஜல்லிக்கட்டானது பெரியசூரியூரில் நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, அதன் முன்புள்ள திடலின் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கொரோனா பரிசோதனை 2 நாட்களுக்கு முன்பு செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் உள்ள வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். காலை 5 மணியில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அருகே வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கினர். அக்காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. 


திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம்..


இதனை தொடர்ந்து  ஜல்லிக்கட்டை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முதலில் வாடிவாசல் வழியாக சூரியூர் ஸ்ரீநற்கடல் கருப்பண்ணசாமி கோவில் காளை, ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் காளை ஆகியவை சீறிப்பாய்ந்து வெளியேறின. கோவில் மாடுகள் என்பதால், அவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் விட்டனர்.

கோவில் மாடுகளுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 
காளையின் அச்சுறுத்தலுக்கு பயந்த காளையர்கள், உயிர் பிழைக்க வாடிவாசல் திடலின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் ஏறி தொற்றிக்கொண்டனர். சில காளைகள், பிடி கொடுக்காமல் ஆட்டம் காண்பித்ததோடு மட்டும் அல்லாமல் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறிப்பாய்ந்தன. வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டது.


திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

காலை முதல் மாலை வரை நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக பதிவு 480 காளைகளும், டோக்கன் இன்றி 6 காளைகளும், 254 மாடுபிடி வீரர்களுமே பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் காளையின் உரிமையாளரான திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மீனாட்சி சுந்தரம் (வயது 29), காளை முட்டி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சேர்த்தனர். ஆனால். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் மீனாட்சி சுந்தரம் உயிரிழந்தார்.

மேலும் மாட்டின் உரிமையாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே உள்ள மங்கனூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 30), சேகர் (55), கும்பக்குடி பாலசுப்பிரமணியன் (26), லால்குடி அன்பில் ஹரிகரசுதன் (18), திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த பார்வையாளர்கள் பிரசாத் (20), நாச்சியார்பட்டி தெய்வராஜ் (55), கீரனூர் உடவயல் ராபர்ட் (34), புதுக்கோட்டை காந்தலூர் அரிஜன தெருவை சேர்ந்த சிவானந்தம் (34), குழுமணி பேரூரை சேர்ந்த சின்னான் (19), மணிகண்டம் பாகனூரை சேர்ந்த அற்புதம் (55), பெரிய சூரியூரை சேர்ந்த விழாக்குழு தன்னார்வலர் கர்ணன் (40), மாடுபிடி வீரர்கள் திருவெறும்பூர் கூத்தப்பார் கிராமத்தை சேர்ந்த அஜய் (21), திருச்சி மலைக்கோவில் பகுதியை சேர்ந்த வைரமணி (24), திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவை சேர்ந்த காஜாமுகமது (22), புதுக்கோட்டை கொழுப்பட்டி நடுத்தெரு சுப்பிரமணியன் (40) உள்பட 52 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு காலை 8.30 மணிக்கு தொடங்கி இடைவிடாது நடந்தது. பிற்பகல் 2 மணியுடன் ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதாக விழாக்குழுவினர் அறிவித்தனர். ஏனென்றால், 2 மணிவரைதான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில் 300 காளைகள்தான் களம் கண்டன. எனவே, மேலும் 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டு மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகளை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரை சேர்ந்த யோகேஷ் சிறந்த வீரராகவும் மற்றும் சிறந்த மாட்டின் உரிமையாளராக கவிக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வனும் தேர்வாக தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பெற்ற வீரர் மனோஜ், மாட்டு உரிமையாளர் ரமேஷ் ஆகியோருக்கு எல்.இ.டி. டி.வி. பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு சிறப்பு பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டன

தலைப்பு செய்திகள்

ஜிஎஸ்டி ரோடு டிராஃபிக்கிற்கு குட்பை! சென்னை டு திருச்சி இனி வெறும் 3 மணி நேரம் தான்... சீக்ரெட் பிளான் இதோ!
ஜிஎஸ்டி ரோடு டிராஃபிக்கிற்கு குட்பை! சென்னை டு திருச்சி இனி வெறும் 3 மணி நேரம் தான்... சீக்ரெட் பிளான் இதோ!
Trichy power cut: திருச்சியில் நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் பவர் கட்? பட்டியலை பாருங்க
திருச்சியில் நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் பவர் கட்? பட்டியலை பாருங்க
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
"தென் மாவட்ட ரயில் பயணிகளே உஷார்! 5 முக்கிய ரயில்களின் பாதை அதிரடி மாற்றம் - உங்க ஊர் ரயில் இருக்கா பாருங்க!"

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget