மேலும் அறிய

அரியலூர் மாவட்டத்தில் 2 பெண்கள் கொலை வழக்கில் ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம் ,பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் கொலை வழக்கில் ஒருவர் கைது. காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணியின் மனைவி மலர்விழி(வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மனைவி கண்ணகியும்(40) கடந்த 22-ந் தேதி சமையலுக்கு காளான் பறிப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சைக்கிளில் சென்றனர். அவர்கள் சைக்கிளை கழுவந்தோண்டி செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு, வயல் பகுதிக்கு சென்று காளான் பறித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயல்வெளியில் தேடியுள்ளனர். அப்போது மலர்விழியும், கண்ணகியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், சூர்கத்தி (அரிவாள்), சுளுக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி, அரிவாளால் வெட்டப்பட்டும், 2 பேரின் கழுத்துப் பகுதியில் சுளுக்கியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்ததாக போலீசாரால் கூறப்படுகிறது.


அரியலூர் மாவட்டத்தில்  2 பெண்கள் கொலை வழக்கில் ஒருவர் கைது

மேலும், கண்ணகியின் செல்போனை காணாததால், அவர் செல்போன் மூலம் யார்? யாரிடம் பேசினார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கண்ணகி முதலாவதாக அவரது மகன் விக்னேஸ்வரனுக்கும், இரண்டாவதாக தனது கொழுந்தனாரின் மனைவி செல்விக்கும் போன் செய்ததும், அவர்கள் போனை எடுக்காததால், தனது அண்ணன் மகனுக்கு போன் செய்ததும் தெரியவந்தது. அவரது அண்ணன் மகன் போனை எடுத்து பேசியபோது கண்ணகி பேசியது ஒன்றும் புரியாததால் இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் போன் செய்தபோது, கண்ணகியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று திடுக்கிடும் தகவல் வெளியானதால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் சுளுக்கி வைத்து வேட்டையாடுபவர்கள் யார்? என்பது பற்றி துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில், கழுவந்தோண்டியை சேர்ந்த பால்ராஜ்(40) என்பவர்தான் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம் என்பது தெரியவந்தது. அதில் இருந்து நூல் பிடித்தவாறு விசாரணையை தொடங்கிய போலீசார், இந்த சம்பவம் நடந்த பகுதி வழியாக முயல் வேட்டைக்கு சென்றவர்களையும், கழுவந்தோண்டி பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் சிலரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குறிப்பாக பால்ராஜிடம் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் 2 பெண்களையும் கொலை செய்தது பால்ராஜ்தான் என்பது தெரியவந்தது.


அரியலூர் மாவட்டத்தில்  2 பெண்கள் கொலை வழக்கில் ஒருவர் கைது

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 பெண்களையும் அவர் மட்டும் தனியாக கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்கேனும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் 2 பெண்களையும் கொலை செய்தது எப்படி? என்பதை செய்து காட்டினார். மேலும் பால்ராஜ் தனது துருப்பிடித்த துப்பாக்கியை அப்பகுதியில் உள்ள ஏரியில் தூக்கி வீசியதாக கூறினார். இதையடுத்து ஏரியில் இருந்து அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். சிறிது தூரத்தில் பால்ராஜ் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து சுளுக்கி மற்றும் அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர். பால்ராஜிடம் இருந்து மலர்விழியின் தாலிச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Embed widget