மேலும் அறிய

ஆயுதபூஜையால் பொருட்களின் விலை உயர்வு; விற்பனை குறைவால் வியாபாரிகள் வேதனை

அரியலூர் மாவட்டத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பொருட்களின் விலை உயர்வால் விற்பனை குறைவாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். இதற்காக அரியலூர் நகரில் நேற்று ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழம், பொரிகடலை, வாழைக்கன்று, மாவிலை, தோரணம், வண்ண காகிதமலர்கள் உள்ளிட்டவை ஏராளமான கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்ததால் வியாபாரம் குறைவாக இருந்தது. பூமாலை, கதம்பம், இலைகளும் 3 மடங்கு விலை உயர்ந்து காணப்பட்டன. பொரி கடலை, அவல், சர்க்கரை அடங்கியவை அடங்கிய பாக்கெட் ரூ.40-க்கு விற்கப்பட்டன. பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.25-ல் இருந்து விலை உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


ஆயுதபூஜையால் பொருட்களின் விலை உயர்வு; விற்பனை குறைவால் வியாபாரிகள் வேதனை

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் பாதி அளவு கூட நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகே வாகனங்களில் கொண்டு வந்து விற்கும் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதன் விலை குறைவு என்றாலும், அதில் தரம் இருக்காது. கடைவீதியில் விற்கப்படும் பழங்கள் தரமாக இருப்பதனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் இதனை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. முன்பெல்லாம் ஆயுத பூஜையை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள். தற்போது சாஸ்திரத்துக்கு குறைந்த அளவில் பொருட்களை வாங்கி கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆயுத பூஜை ஐப்பசி மாதத்தில் வந்தது. ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வந்துள்ளதால் ஆயுத பூஜை முடிந்தாலும் பழங்களை விற்க முடியாது. ஏனென்றால் புரட்டாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் கிடையாது என்பதால் யாரும் சுபநிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள். இதனால் கெட்டு போகக்கூடியதான பழங்களின் விற்பனை மந்தமாகும். வியாபாரிகள் நஷ்டம் அடைவார்கள். மற்ற வியாபாரமும் இது போலவே உள்ளது என்றார். பழங்களில் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.160-க்கும், வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்றால் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்படாமல் இருந்தது. இருந்தபோதும் இந்த ஆண்டு விலைவாசி உயர்வாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் ஆயுத பூஜை விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கூறினார்கள். 


ஆயுதபூஜையால் பொருட்களின் விலை உயர்வு; விற்பனை குறைவால் வியாபாரிகள் வேதனை

இதனை தொடர்ந்து வியாபாரி மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. ஆயுதபூஜையை முன்னிட்டு கொண்டைக்கடலை, பட்டாணி, அவல்பொரி ஆகியவை அதிக அளவில் விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் வியாபாரம் மந்தமாக உள்ளது என்றனர். மேலும்  பூ விலை 3 மடங்கு உயர்ந்துள்ளதால் 10 முழம் பூ வாங்குபவர்கள் 5 முழம்தான் வாங்குகின்றனர். மல்லிகை பூ ஒரு முழம் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வியாபாரம் குறைவாகவே உள்ளது. பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கூறியது..  நகரில் வழக்கமாக பல இடங்களில் தற்காலிக தடைகள் அமைக்கப்பட்டு, ஆயுத பூஜைகளுக்கு பொருட்கள் விற்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை வாழைக்கன்றுகள், பூ, பழம் விற்கும் கடைகள் குறைவாகவே உள்ளது. அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. அதனால் பொருட்கள் வாங்குபவர்கள் குறைந்த அளவே வருகின்றனர். இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையில் விற்பனை குறைவாகவே உள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Embed widget