![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Cauvery Calling: திருச்சியில் தொடங்கியது காவேரி கூக்குரல் இயக்கத்தின், மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு..!
திருச்சி, கொப்பம்பட்டியில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.
![Cauvery Calling: திருச்சியில் தொடங்கியது காவேரி கூக்குரல் இயக்கத்தின், மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு..! Cauvery Calling movement to conduct a mega seminar on tree-based agriculture in Trichy Cauvery Calling: திருச்சியில் தொடங்கியது காவேரி கூக்குரல் இயக்கத்தின், மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/18/4711c4ee29755c33c7f548ca79b041291663473801401102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவேரி கூக்குரல் இயக்கத்தினர் மக்களிடம் விவசாயம் தொடர்பாகவும், விவசாயத்தின் மூலம் எளிதாக வருவாய் ஈட்டும் வழிமுறைகளையும் விளக்கமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில், காவேரி கூக்குரல் இயக்கத்தினர் சார்பில் திருச்சியில் இன்று மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் மரம் சார்ந்த விவசாயம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயம் செய்யும் ஆர்வம் அதிகரித்ததையடுத்து, இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி, துறையூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டியில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனத்தின் (IFGTB) விஞ்ஞானி டாக்டர். மாயவேல் ‘மலைவேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்’ எனும் தலைப்பிலும், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் டாக்டர் ஹரிதாஸ் ‘பலா – பழமும் தரும், மரம் மூலம் மொத்த பணமும் தரும்’ எனும் தலைப்பிலும், பல்லடத்தை சேர்ந்த முன்னோடி
விவசாயி துரைசாமி ‘4 அடுக்கு பாதுகாப்பில் 40 ஏக்கரில் சந்தன மரங்கள் ’என்ற தலைப்பிலும், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் ராமன் ‘மழை நீரே போதும் – 60 ஏக்கர் நிலத்தில் அற்புத காடு’ என்ற தலைப்பிலும், பண்ருட்டியில் சமவெளியில் மிளகு பயிரிடும் விவசாயி திருமலை ‘கருப்பு பனையில் கருப்பு தங்கம் (மிளகு)’ என்ற தலைப்பிலும் பேசுகின்றனர்.
தேக்கு, குமிழ் தேக்கு, மகோகனி, வேங்கை போன்ற மரங்களை வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். ‘லிட்டில் ஊட்டி’ என்ற பெயரிலான வேளாண் காட்டில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பல்வேறு வகை மரங்களை அக்காட்டின் உரிமையாளர் டாக்டர் துரைசாமி வளர்த்து வருகிறார். அந்த பிரமாண்ட வேளாண் காட்டை விவசாயிகள் சுற்றி பார்க்கும் ‘பண்ணை பார்வையிடல்’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கருத்தரங்கு முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. விவசாயிகள் 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)