மேலும் அறிய

எம்பி கனிமொழியை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக காந்திச்சந்தை பகுதிச் செயலாளர் சுரேஷ் குப்தா கைது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி. பழனிசாமி  ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து, திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்சி மாநகராட்சி 17,19,20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் மாநகராட்சி இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகிறார்கள். மக்களின் உயிர் மேல் எந்த அக்கறையும் பாராமல் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான திமுக அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து,  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ப.மோகன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னிலையில், நடைபெற்றது. 


எம்பி கனிமொழியை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வரிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ , தேமுதிக மற்றும் வியாபார சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றனர். 

மேலும், அதிமுக அமைப்பு செயலாளர்கள், ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், வழக்கறிஞர் முல்லை சுரேஷ், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.


எம்பி கனிமொழியை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு

திருச்சி அதிமுக பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா கைது..

இந்நிலையில் மேடையில் பேசிய திருச்சி அதிமுக காந்திசந்தை பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா பேசியது.. 

திமுக அமைச்சர்கள் மற்றும் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் குறித்து அவதூறு பேச்சுகளை பேசியதாக புகார் எழுந்தது. அதன் பேரில் திருச்சி காந்திசந்தை போலீஸார், அவர் மீது அவதூறுப்பேச்சு, ஆபாசமாக பேசுதல், மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து நேற்று  அவரைக் கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது, அங்கு சுரேஷ்குப்தா மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரைப் போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இதனை தொடர்ந்து நேற்று இரவு 11 மணி வரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள், வாதிட்டு பின்பு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
Embed widget