மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த எம்.புதுப்பட்டி ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவருக்கு புகழேந்தி, நவீந்திரன் ஆகிய 2 மகன் உள்ளனர். இதில் நவீந்திரன் (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்த நவீந்திரனை பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாதபோது, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் தற்கொலை

இதேபோல் மணப்பாறை பூமாலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் முன்னாள் தி.மு.க. நகர்மன்ற கவுன்சிலராக இருந்தார். இவரது மகன் லியோ ஆல்பர்ட் (24). இவர் நேற்று வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது நீண்ட நேரத்திற்கு முன்னரே ஆல்பர்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்த லியோ ஆல்பர்ட் நேற்று முன்தினம் மணப்பாறையில் நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ளார். அதில் அவரின் அணி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து வெற்றிக்கொண்டாட்டத்தை அவரது நண்பர்களுடன் கொண்டாடினார்.இந்த நிலையில் ஆல்பர்ட் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் தற்கொலை

இதேபோல் தொட்டியம் அருகே உள்ள அலகரை அரியனாம்பேட்டையை சேர்ந்தவர் பழனியாண்டி. விவசாயி. இவரது மகன் சரண் (22). இவர் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரண் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் தினமும் மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை பழனியாண்டி மது பழக்கத்தை கைவிடுமாறு சரணை கண்டித்துள்ளார். இந்தநிலையில் சரண் குடிபோதையில் விஷத்தை குடித்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.


 

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget