மேலும் அறிய

பெண்கள் நடத்திய மது குடிக்கும் போராட்டத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திசையன்விளை கிராமத்தில் புதிதாக அமையவிருக்கும் மதுபானக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மது குடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை கிராமத்தை சுற்றி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமமானது ராதாபுரம் தாலுகாவில் இருந்து பிரிந்து  தனி தாலுகாவாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட நவ்வலடி கிராமம் அருகே எருமைகுளம் பஞ்சாயத்து பகுதியில் புதிதாக அமையவிருக்கும் மதுபானக்கடையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளிக்க வந்தனர்,


பெண்கள் நடத்திய மது குடிக்கும் போராட்டத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

அப்போது பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல்  புதிதாக மதுபானக்கடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வரும்  நிர்வாகத்தை கண்டித்தும் மதுக்கடையால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் வகையிலும் பெண்களுக்கும் ஆண்களும்  ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து மதுகுடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மதுபாட்டில்களுடன் வந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகம்  முன்பு அதனை குடிக்க முயன்றனர். இதனை தடுத்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பேச்சுவார்த்தை  நடத்தினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர், 


பெண்கள் நடத்திய மது குடிக்கும் போராட்டத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் பொழுது, திசையன் விளை தாலுகாவானது முதன்மை தாலுகாவாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இங்கு ஊருக்கு வெளியே இரண்டு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது, இதனை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் ஊருக்குள் எந்த ஒரு சட்ட சிக்கலோ, வழிப்பறியோ இல்லாமல் அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது, இந்த சூழலில் ஊருக்குள் புதிதாக மதுக்கடை அமையவிருக்கிறது, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய மதுக்கடை அமையவிருக்கும் இடமானது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம், குறிப்பாக அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோவில், தொழில்நுட்ப கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, மருத்துமனை என மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பரபரப்பான இடமாகும். 

பெண்கள் நடத்திய மது குடிக்கும் போராட்டத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இந்த இடத்தில் புதிய மதுக்கடை அமைவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, மேலும் விபத்துகளும், செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கடந்த 01.11.21 அன்று ஆட்சியருக்கு மனு அளித்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏற்கனவே செயல்படும் இரண்டு மதுபானக்கடையோடு நிறுத்தி கொள்ள வேண்டும், புதிய கடை அமைப்பதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர், இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை உரிய எடுக்காவிடில் ஊர்மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.   ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் மதுகுடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget