மேலும் அறிய

விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி அளித்து கடிதம் வழங்கி உள்ளோம். இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து என்பதால் இரு நாடுகளிடமும் அனுமதி பெற வேண்டும்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் லட்சினையை(லோகோ) மாற்றுவதற்கான துறைமுகம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக அகில இந்திய அளவில் லோகோ வரைந்து அனுப்பும் போட்டி நடந்தது. இதன் மூலம் புதிய லோகோ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த லோகோ அறிமுக நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர்(பொறுப்பு) பிமல்குமார் ஜா தலைமை தாங்கினார்.


விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

 

சிறப்பு அழைப்பாளராக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு லோகோவை அறிமுகப்படுத்தி பேசினார். பெருமை அப்போது, புதிய லோகோவை அறிமுகம் செய்வது பெருமையாக இருக்கிறது. இந்த லோகோவை உருவாக்க ஓராண்டாக முயற்சி செய்து வந்தோம். அந்த கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்த லோகோவில் உள்ள தத்துவங்கள் நன்றாக இருக்கிறது. இதற்காக ஒரு போட்டி நடத்தப்பட்டு, அதன் மூலம் லோகோவுக்கான கரு கிடைத்தது. இந்த லோகோ எளிமையாகவும், நவீனமாகவும் உள்ளது. நமக்கு எப்போதும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். தூத்துக்குடி துறைமுகம் உலகின் சிறந்த துறைமுகமாக மாறும் என்றார்.


விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த லோகோவுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ராஜேந்திரன் ஆர்.ரஞ்சனி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. வ.உ.சி துறைமுகம் உலகின் முக்கியமான துறைமுகமாக திகழ்வதற்கு இது ஒரு முக்கியமான பணியாக இருக்கும். அகில இந்திய அளவில் சாகர்மாலா திட்டத்தின் மூலம் சுமார் ரூ.5½ லட்சம் கோடி பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மட்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் 9-வது கப்பல் தளம் சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ரூ.7 ஆயிரம் கோடி செலவில் வெளித்துறைமுகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தியா முழுவதும் அனைத்து துறைமுகங்களிலும் நல்ல வளர்ச்சி உள்ளது. ஒவ்வொரு துறைமுகத்தில் ஒவ்வொரு விதமான பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி அதிகமாக உள்ளன. மராட்டிய மாநிலத்தில் வாதுவான் என்ற பகுதியில் புதிய துறைமுகம் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறைமுகத்திலும், அந்த பகுதிக்கு ஏற்றவாறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி துறைமுகத்தை பொறுத்தவரை திரவ ஹைட்ரஜன் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, குஜராத் துறைமுக பகுதிகளில் கடலில் காற்றாலைகள் அமைப்பதற்கான வாய்ப்பு உள்ள இடமாக இருக்கிறது. ஆகையால் இரண்டு பகுதியிலும் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடியில் முதல் கட்டமாக 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சாரவாரியம் வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.


விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

கொச்சி, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் சுற்றுலா முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த துறைமுகங்களில் இருந்து சுற்றுலா கப்பல்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரை, சர்வதேச கடல் பகுதி மற்றும் ஆறு ஆகிய நீர் வழித்தடங்களை இணைக்கும் வகையில் நீர்வழி போக்குவரத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக 2 கப்பல் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனை ஆய்வு செய்து, கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி அளித்து கடிதம் வழங்கி உள்ளோம். இது இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து என்பதால் இரு நாடுகளிடமும் அனுமதி பெற வேண்டும். இதனால் அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 300 பயணிகளை ஏற்றி செல்லும் வகையிலான கப்பலை இயக்க உள்ளனர். இலங்கையில் இருந்து அனுமதி கிடைத்த உடன் விரைவில் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Embed widget