மேலும் அறிய

நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் - எம்.பி.கனிமொழி

நீட் தேவை உள்ள மாநிலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி சில மாநிலங்களில் நீட் அமல்படுத்தவில்லை - அமைச்சர் கீதாஜீவன்

தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைநகரங்களில் திமுகவினரோடுஅமைச்சர்கள் மற்றும் எம்.பி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் பங்கேற்றனர்.


நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் - எம்.பி.கனிமொழி

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முடித்து வைத்து பேசினார். அப்போது, தி.முக. நீட் தேர்வு தேவை இல்லை என்று தொடர்ந்து போராடி வருகிறது. அதன் நீட்சியே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இது மாணவர்கள் போராட்டமாக, மக்கள் போராட்டமாக மாற வேண்டும். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும். அந்த நிலையை மாற்றியது தி.மு.க. சாதாரண ஏழை, எளிய மக்களின் குழந்தைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வை கலைஞர் ரத்து செய்தார். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார். ஏழை, எளிய மாணவர்களும் டாக்டர்களாக உருவானார்கள்.


நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் - எம்.பி.கனிமொழி

இது யார் கண்களை உறுத்தியதோ தெரியவில்லை. இன்று நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது. சிலர் நீட் தேர்வில் நம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்று கூறுகிறார்கள். என்ன தடை வந்தாலும் எங்களால் தாண்ட முடியும். ஆனால் அந்த தடையை உருவாக்க உங்களுக்கு உரிமை இல்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கவர்னர் எந்த சூழலிலும் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட மாட்டேன் என்று கூறுகிறார். நம்முடைய கல்வி என்ற ஆயுதத்தை தட்டி பறிக்க நினைக்கிறார்கள். நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் என்றார்.


நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் - எம்.பி.கனிமொழி

அமைச்சர் கீதாஜீவன் போராட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, "தி.மு.க.வை பொறுத்தவரை தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. நீட் தேவை உள்ள மாநிலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி சில மாநிலங்களில் நீட் அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்துக்குள் நீட் தேர்வு வந்தது. கவர்னர் அரசுக்கு எதிராக எல்லா செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார் என்றார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது, மத்திய அரசு உள்நோக்கத்தோடு தமிழக அரசை வஞ்சிக்கிறது. பல்வேறு வகையில் நீட் தேர்வை கொண்டு வர முயன்றும், ஜெயலலிதா இருக்கும் வரை இங்கு நீட் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தான் தமிழகத்தில் அது நடைமுறைக்கு வந்தது. இதற்கு காரணம் அ.தி.மு.க தான்" என்று கூறினார்.


நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள் - எம்.பி.கனிமொழி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget