மேலும் அறிய

தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை தினமும் 62 எம்எல்டி குடிநீர் தேவை. ஆனால், தற்போது 20 முதல் 25 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் தற்போது 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறையும், ஒருநாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறையும் என்ற அளவிலேயே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது.ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், மாநகராட்சி பகுதிக்கு வரும் குடிநீரின் அளவும் குறைந்துள்ளது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி கோடை காலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் கலியாவூர் நீரேற்று நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

அப்போது நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வரும் பாதையில் அமலைச் செடிகள் அதிகமாக இருப்பதை கண்டு, அவைகளை உடனடியாக அகற்றி, தண்ணீர் வருவதற்கு வசதியாக கூடுதல் பாதைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அமலைச் செடிகள் அகற்றப்பட்டு, நீரேற்று நிலையத்துக்கு கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் தோண்டிவிடப்பட்டது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, "கடந்த ஆண்டு பருவமழை பெய்த்ததன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த மார்ச் 28-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் சமாளித்தோம். தற்போது மீண்டும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச் செடிகளை பொக்லைன் மூலம் அகற்றி, கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.அதன் மூலம் தொடர்ந்து 50 நாட்களுக்கு ஓரளவுக்கு பிரச்சினை இல்லை. மேலும், மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் கூடுதல் தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு பருவமழை ஜூன் 15-ம் தேதி வாக்கில் தொடங்கி விடும். அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
Embed widget