மேலும் அறிய

தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை தினமும் 62 எம்எல்டி குடிநீர் தேவை. ஆனால், தற்போது 20 முதல் 25 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் தற்போது 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறையும், ஒருநாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறையும் என்ற அளவிலேயே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது.ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், மாநகராட்சி பகுதிக்கு வரும் குடிநீரின் அளவும் குறைந்துள்ளது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி கோடை காலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் கலியாவூர் நீரேற்று நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

அப்போது நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வரும் பாதையில் அமலைச் செடிகள் அதிகமாக இருப்பதை கண்டு, அவைகளை உடனடியாக அகற்றி, தண்ணீர் வருவதற்கு வசதியாக கூடுதல் பாதைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அமலைச் செடிகள் அகற்றப்பட்டு, நீரேற்று நிலையத்துக்கு கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் தோண்டிவிடப்பட்டது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, "கடந்த ஆண்டு பருவமழை பெய்த்ததன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த மார்ச் 28-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் சமாளித்தோம். தற்போது மீண்டும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச் செடிகளை பொக்லைன் மூலம் அகற்றி, கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.அதன் மூலம் தொடர்ந்து 50 நாட்களுக்கு ஓரளவுக்கு பிரச்சினை இல்லை. மேலும், மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் கூடுதல் தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு பருவமழை ஜூன் 15-ம் தேதி வாக்கில் தொடங்கி விடும். அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget