மேலும் அறிய

தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை தினமும் 62 எம்எல்டி குடிநீர் தேவை. ஆனால், தற்போது 20 முதல் 25 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் தற்போது 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறையும், ஒருநாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறையும் என்ற அளவிலேயே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது.ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், மாநகராட்சி பகுதிக்கு வரும் குடிநீரின் அளவும் குறைந்துள்ளது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி கோடை காலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் கலியாவூர் நீரேற்று நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

அப்போது நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வரும் பாதையில் அமலைச் செடிகள் அதிகமாக இருப்பதை கண்டு, அவைகளை உடனடியாக அகற்றி, தண்ணீர் வருவதற்கு வசதியாக கூடுதல் பாதைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அமலைச் செடிகள் அகற்றப்பட்டு, நீரேற்று நிலையத்துக்கு கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் தோண்டிவிடப்பட்டது.


தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, "கடந்த ஆண்டு பருவமழை பெய்த்ததன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த மார்ச் 28-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் சமாளித்தோம். தற்போது மீண்டும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச் செடிகளை பொக்லைன் மூலம் அகற்றி, கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.அதன் மூலம் தொடர்ந்து 50 நாட்களுக்கு ஓரளவுக்கு பிரச்சினை இல்லை. மேலும், மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் கூடுதல் தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு பருவமழை ஜூன் 15-ம் தேதி வாக்கில் தொடங்கி விடும். அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான் ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Tamilnadu Roundup : செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்? 2026ல் தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup : செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்? 2026ல் தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை - தமிழ்நாட்டில் இதுவரை
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
Embed widget