மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் திருடப்பட்ட 453 செல்போன்கள் மீட்பு

செல்போனை பயன்படுத்தும்போது பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் மிகவும் கவனமாக கையாளவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். இதனால் 16 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் மீட்டனர். ஏற்கனவே 353 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 453 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன.


தூத்துக்குடி மாவட்டத்தில் திருடப்பட்ட 453 செல்போன்கள் மீட்பு

தற்போது செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட  காவல்துறை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கி பேசினார். அப்போது. செல்போனை பயன்படுத்தும்போது பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் கவனமாக கையாளவேண்டும், செல்போனில் நல்ல நிகழ்வுகளும் வருகிறது, கெட்ட நிகழ்வுகளும் வருகிறது, சிறுவர், சிறுமிகள் ஆன் லைன் வகுப்புக்கு செல்போன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்கள் என்னென்ன விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும், செல்போன் படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், மற்ற நேரங்களில் அதை பொதுவான இடத்தில் வைக்கும்படி செய்யவேண்டும், அவர்களுடைய வாழ்க்கைக்கு தேவையில்லாதவற்றையோ, வேறு பிரச்சனைகள் வரக்கூடியதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் திருடப்பட்ட 453 செல்போன்கள் மீட்பு


பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு வகையான 10 திருட்டு வழக்குகளில் நூதனமான முறையில் திருடிய 12 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து உள்ளோம்.


தூத்துக்குடி மாவட்டத்தில் திருடப்பட்ட 453 செல்போன்கள் மீட்பு

அவர்களிடம் இருந்து ரூ.91 ஆயிரம் மதிப்புள்ள 3 ½ பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்வலை மற்றும் ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரத்து 560-ம் மீட்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget