மேலும் அறிய

Vande Bharath: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஆளுநர் தமிழிசை, அமைச்சர் எல்.முருகன்

திருநெல்வேலி - சென்னை இடையேயான 660 கிலோமீட்டர் தொலைவு தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலான திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கியது. பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றதோடு ரயிலில் பயணம் செய்தனர். திருநெல்வேலி சென்னை இடையேயான 660 கிலோமீட்டர் தொலைவு தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லக்கூடிய இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மதியம் 2:50 சென்னை எழும்பூரில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலுக்கு கட்டணமாக 1665 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் கார் வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க 3025 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள்  குழுமியிருந்து ரயிலை வழி அனுப்பி வைத்தனர்.


Vande Bharath: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஆளுநர் தமிழிசை, அமைச்சர் எல்.முருகன்

இந்த ரயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நெல்லையில் இருந்து மதுரை வரை பயணம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்சி வரையிலும், நயினார் நாகேந்திரன் சென்னை வரையிலும் பயணம் மேற்கொள்கின்றனர். இதுவரை இயக்கப்பட்டு வரக்கூடிய ரயிலை விட வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் இரண்டு மணி நேரம் பயண நேரம் குறையும் என்பதால் வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை போல நாடு முழுவதும் ஒன்பது ரயில் சேவைகள் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஐதராபாத் - பெங்களூர் இடையேயான ரயில் சேவை ராஞ்சி - ஹவுரா இடையேயான ரயில் சேவை உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் சேவை,  சென்னை - விஜயவாடா ரயில் சேவை உள்ளிட்ட ஒன்பது சேவைகள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நெல்லை - சென்னை இடையேயான இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் குழுமியிலிருந்து ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget