மேலும் அறிய

ஒரே குடும்பத்தில் மூவர் அடுத்தடுத்து உயிரிழப்பு..! சோகத்தில் மூழ்கிய கிராமம்..! நெல்லையில் நடந்தது என்ன?

மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். வயது 50, இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.  இவரது தாய் பகவதி, கிருஷ்ணன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணனின் தங்கை மாலா திருமணமாகி கணவரை பிரிந்து தனது தாய் பகவதியுடன் வசித்தார். இவர்களுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாத நிலையில் கிருஷ்ணனை சார்ந்து வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அதோடு கிருஷ்ணன் தனது மனைவி குழந்தைகளை மட்டுமல்லாமல் தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரையும் ஒரு சேர கவனித்து வந்துள்ளார். வீட்டில் மசாலா சாமான்கள் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர் தான் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டது. இதற்கிடையில் மகன் இறந்த தகவல் கேட்டு தாய் பகவதி மற்றும் கிருஷ்ணனின் சகோதரி மாலா ஆகியோர் வீட்டுக்கு வந்து உடல் முன்பு அமர்ந்து கதறி அழுதுள்ளனர். கொஞ்சமும் எதிர்பாராத மரணம் அவர்களை செய்வதறியாது திகைக்க செய்தது. அதோடு கிருஷ்ணனின் உடல் முன்பு தன்னையும் தன் மகளையும் கவனிக்க இனிமேல் யார் இருக்கிறார் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி தாய் பகவதி அழுது புலம்பியுள்ளார். அதன்பின்னர்  தாய் பகவதியும், மகள் மாலாவும் கிருஷ்ணனின் வீட்டில் இருந்து அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு சென்று நெடு நேரமாகியும் மீண்டும் அவர்கள் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணன் இறந்ததில் மனமுடைந்த அவர்கள் செய்வதறியாது இந்த முடிவை எடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஒரே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கீழதென்கலம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Embed widget