மேலும் அறிய

ஒரே குடும்பத்தில் மூவர் அடுத்தடுத்து உயிரிழப்பு..! சோகத்தில் மூழ்கிய கிராமம்..! நெல்லையில் நடந்தது என்ன?

மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். வயது 50, இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.  இவரது தாய் பகவதி, கிருஷ்ணன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணனின் தங்கை மாலா திருமணமாகி கணவரை பிரிந்து தனது தாய் பகவதியுடன் வசித்தார். இவர்களுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாத நிலையில் கிருஷ்ணனை சார்ந்து வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அதோடு கிருஷ்ணன் தனது மனைவி குழந்தைகளை மட்டுமல்லாமல் தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரையும் ஒரு சேர கவனித்து வந்துள்ளார். வீட்டில் மசாலா சாமான்கள் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர் தான் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டது. இதற்கிடையில் மகன் இறந்த தகவல் கேட்டு தாய் பகவதி மற்றும் கிருஷ்ணனின் சகோதரி மாலா ஆகியோர் வீட்டுக்கு வந்து உடல் முன்பு அமர்ந்து கதறி அழுதுள்ளனர். கொஞ்சமும் எதிர்பாராத மரணம் அவர்களை செய்வதறியாது திகைக்க செய்தது. அதோடு கிருஷ்ணனின் உடல் முன்பு தன்னையும் தன் மகளையும் கவனிக்க இனிமேல் யார் இருக்கிறார் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி தாய் பகவதி அழுது புலம்பியுள்ளார். அதன்பின்னர்  தாய் பகவதியும், மகள் மாலாவும் கிருஷ்ணனின் வீட்டில் இருந்து அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு சென்று நெடு நேரமாகியும் மீண்டும் அவர்கள் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணன் இறந்ததில் மனமுடைந்த அவர்கள் செய்வதறியாது இந்த முடிவை எடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஒரே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கீழதென்கலம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Embed widget