மேலும் அறிய

Thoothukudi VAO Murder Case: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை - 25 நாட்களில் தீர்ப்பு

அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக ஐந்து ஆண்டும் கொலை மிரட்டலுக்காக ஓராண்டும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவு

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.


Thoothukudi VAO Murder Case: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை -  25 நாட்களில் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோயில்பத்து கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார் லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் 407 வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ராமசுப்பு என்பவர் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் காரணமாக ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அலுவலகத்தில் உள்ளே புகுந்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Thoothukudi VAO Murder Case: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை -  25 நாட்களில் தீர்ப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இறந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கினார். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் 25-05-23 அன்று 2 மாதத்தில் இந்த வழக்கை முடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் 21-06-23- அன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. அதனை தொடர்ந்து வழக்கு 17-07-23 அன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.


Thoothukudi VAO Murder Case: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை -  25 நாட்களில் தீர்ப்பு

மாவட்ட நீதிமன்ற விசாரணைக்காக 52 சாட்சிகள் இந்த கொலை வழக்கு தொடர்பாக அடையாளம் காணப்பட்டு மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு விசாரணை நடந்த 21 ஆம் தேதி துவங்கி 31 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிவுற்றது.


Thoothukudi VAO Murder Case: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை -  25 நாட்களில் தீர்ப்பு

மிகவும் விரைவாக இந்த வழக்கில் 25 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இன்று மாவட்ட நீதிபதி செல்வம் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்தார் இதில் அரசு அலுவலரை பணி செய்யும் இடத்திலேயே கொடூரமாக கொலை செய்தது, அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததிற்கு, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதில் அரசு அலுவலரை பணி செய்யும் இடத்திலேயே கொடூரமாக கொலை செய்த மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 3000 ரூபாய்அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார் அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக ஐந்து ஆண்டும் கொலை மிரட்டலுக்காக ஓராண்டும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Embed widget