மேலும் அறிய

நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் மூன்று பேர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை அமர்வு நீதிமன்றம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சுதர்சனம் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சுதர்சனத்தை காப்பாற்ற வந்த அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு 62 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது, இந்த சம்பவம்   தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கொள்ளையர்களை பிடிக்க அப்போதைய ஐஜி ஜாங்கிட் தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாக செயல்பட்ட இந்த படைகள் ஒரே மாதத்தில் கொள்ளையடித்த கும்பல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்தது. ஹரியானா, ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் பவாரியா கொள்ளையர்களை சுட்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தனர். 

பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை

அரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் அவரது சகோதரர் ஜெகதீஷ், ஜெயிந்தர் சிங், ராகேஷ், அசோக், உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலைத் தனிப்படையினர் ராஜஸ்தானில் தட்டி தூக்கினர். ஜாமினில் வெளிவந்த மூன்று பெண்கள் தலைமறைவாகிவிட்டனர். 20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் புழல் சிறையிலேயே மரணம் அடைந்தனர். இதனையடுத்து மீதமுள்ள ஜெயில்தார் சிங், ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் மீதான வழக்கு விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், குற்றவாளிகள் ஜெயில்தார் சிங் ,ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆப்ரஹாம் லிங்கம் தீர்ப்பளித்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget