மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கலப்படம்; ஏழை மக்கள் பாதிப்பு

இவ்வரிசி சாதத்தை குழந்தைகள், இரத்த சோகை உடையவர்கள் சாப்பிட்டால் உபாதைகள் ஏற்படுகிறது. வயிறு மந்தமாக உள்ளது. இனம் புரியாத நோய் ஏற்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு பொது விநியோகத்திட்டம மூலம் ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், மண்ணென்ணெய், மைதா, ரவை, சோப்பு, மளிகை பொருட்கள் என பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, பொருள் இல்லா அட்டை, காவலர் அட்டை என குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரிசி குடும்ப அட்டையில் AAy அட்டைக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. PHH அட்டைக்கு உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் உறுப்பினர்கள் அடிப்படையில் கணக்கிட்டு அரிசி வழங்கப்படுகிறது. NPHH அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இவ்வரிசியை தமிழக அரசு இந்திய உணவு கழகத்திடம் கிலோ ரூ.5.85க்கு மானியத்தில் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் கூறும் பொழுது, ”கடந்த காலங்களில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசியில் குருணை, கடுக்கான் கலந்து காணப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு கடந்த ஆறுமாத காலமாக பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியில் கடுக்கான், குருணை முற்றிலும் நீக்கப்பட்டு சுத்தமான அரிசியை விநியோகித்து வருகிறது. இதனால் இவ்வரியை பயன்படுத்தும் அடித்தட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் 21.08.2021 அன்று இந்தியா முழுக்க பொது விநியோகத்திட்டம் மூலம் வழங்கப்படும் அரிசியில் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை கலந்து விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்படையில் ரேசன் அரிசியில் ரப்பர் அரிசி எனப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் 31.07.23 அன்று தமிழக அரசின் பொது விநியோகத்திட்ட ஆணையர் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை குறிப்பில் இரத்த சோகை உடையவர்கள், குழந்தைகள் ரேசன் அரிசியில் கலப்படம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கி உண்ண வேண்டாம் எனவும், அவர்களுக்கு செறிவுட்டப்பட்ட அரிசியை வழங்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கலப்படம்; ஏழை மக்கள் பாதிப்பு

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் மீண்டும் ரப்பர் அரிசி எனப்படும் செறிவுட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படுகிறது. இந்த அரிசி பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தவிர இரத்த சோகை உள்ளவர்கள், குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி அல்லாத சுத்தமான அரிசியை விநியோகிக்கப்படுவதில்லை. குடும்ப அட்டை அடிப்படையில் மொத்தமாகவே அரிசி வழங்குகின்றனர். இவ்வரிசி சாதத்தை குழந்தைகள், இரத்த சோகை உடையவர்கள் சாப்பிட்டால் உபாதைகள் ஏற்படுகிறது. வயிறு மந்தமாக உள்ளது. இனம் புரியாத நோய் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசியில் ரப்பர் அரிசி எனப்படும் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசியை கிராம் அடிப்படையில் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தனியாக வழங்கி, செறிவூட்டப்பட்ட அரிசி தேவைப்படுபவர்கள் மட்டும் தேவையான அளவை அரிசியில் பயன்படுத்தி கொள்ளும்படி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget