மேலும் அறிய

ஸ்ரீவைகுண்டம் அருகே சுட்டெரிக்கும் வெயில்; தீயில் கருகும் வாழைகள்- வருண பகவான் கருணை காட்டுவாரா?

கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் வாழை பயிரை விவசாயம் செய்தாலும் அவ்வப்போது தீ பிடித்து பச்சை வாழையும் எரியும் நிலை உள்ளதாக கூறும் விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருக்கிப்பதாக கூறுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டத்தில் பயங்கர தீ விபத்து. 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் எரிந்து நாசமானது.


ஸ்ரீவைகுண்டம் அருகே சுட்டெரிக்கும் வெயில்; தீயில் கருகும் வாழைகள்- வருண பகவான் கருணை காட்டுவாரா?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செய்துங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு கீழ்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. மேலும் 200 ஏக்கரில் நெல் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது தரிசு நிலமாக உள்ளது.


ஸ்ரீவைகுண்டம் அருகே சுட்டெரிக்கும் வெயில்; தீயில் கருகும் வாழைகள்- வருண பகவான் கருணை காட்டுவாரா?

இந்த நிலையில் இந்த வாழைத்தோட்டத்தின் பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் அந்த பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயிகள் அருகில் இருந்த மோட்டார் செட் மூலம் தண்ணீர் ஊற்றி இந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ வேகமாக அருகில் இருந்த வாழைத் தோட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. உடனே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் மற்றொரு இடத்திற்கு தீ அணைக்க சென்று விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.


ஸ்ரீவைகுண்டம் அருகே சுட்டெரிக்கும் வெயில்; தீயில் கருகும் வாழைகள்- வருண பகவான் கருணை காட்டுவாரா?

இந்த நிலையில் தற்போது சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தீ வாழைத் தோட்டங்களில் வேகமாக பரவி எரிந்தது. சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான வாழைகள் தீயில் கருகியது. அறுவடை நேரத்தில் குலை தள்ளியிருந்த வாழைகள் மற்றும் வாழைதார்கள் தீயில் எறிந்து சாம்பலானது. அந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினரோ, வாகனமோ வரவில்லை. இதனால் 25க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


ஸ்ரீவைகுண்டம் அருகே சுட்டெரிக்கும் வெயில்; தீயில் கருகும் வாழைகள்- வருண பகவான் கருணை காட்டுவாரா?

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏரலில் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் வாழை தோட்டத்தில் பிடித்த தீயினால் 500 க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகியது. இதே போன்று கடந்த   சில நாட்களுக்கு முன்பாக ஆதிச்சநல்லூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பனை மரங்களும் தென்னை மரங்களும் தீ பிடித்து எரிந்தது.

அக்னி நட்சத்திர வெயிலை விட கடந்த சில தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. மழை இல்லாத நிலையில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் வாழை பயிரை விவசாயம் செய்தாலும் அவ்வப்போது தீ பிடித்து பச்சை வாழையும் எரியும் நிலை உள்ளதாக கூறும் விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருக்கிப்பதாக கூறுகின்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget