மேலும் அறிய

தூத்துக்குடி: புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஈரோட்டில் வாரந்தோறும் சந்தை கூடுவது வழக்கம். அதே போல், இங்கு சுமார் 300 கடைகள் வரை கட்டி சந்தை அமைத்தால் உற்பத்தியாளர்களுக்கும் கொள்முதல் செய்வது எளிதாக இருக்கும்.

புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி: புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் இருந்து வருகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வானம் பார்த்த பூமியான புதியம்புத்தூரில் குடிசை தொழில் போல் எங்கு திரும்பினால் ஆயத்த ஆடை உற்பத்தி என்பது நடந்து வருகிறது. இங்கு சுமார் 300 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஆயத்த தயாரிப்புக்கு தேவையான மொத்த ஜவுளி கடைகள், பட்டன், நூல் கண்டுகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அதிகம். 


தூத்துக்குடி: புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளான ஓட்டப்பிடாரம், கீழமுடிமண், வேலாயுதபுரம், கொம்பாடி, கச்சேரிதளவாய்புரம், இராஜாவின்கோவில், தட்டப்பாறை, சில்லாநத்தம், துரைச்சாமிபுரம், சில்லாகுளம், பாஞ்சாலங்குறிச்சி, சிலோன்காலனி, இந்திரா நகர், குலசேகரநல்லூர், புதுப்பச்சேரி, ஜம்முலிங்காபுரம், சாமிநத்தம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். 


தூத்துக்குடி: புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தையல் பயிற்சி பள்ளி, ஆயத்த ஆடை உற்பத்திக்கு மானியத்தில் மின்சாரம், சில்லாநத்தம் கிராமத்தில் ரயில் நிலையம் என்பன போன்ற கோரிக்கைகளும் நிறைப்படாமல் உள்ளன.

இதுகுறித்து புதியம்புத்தூர் ரெடிமேட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜெகதீசன் கூறும்போது, சூரத்தில் இருந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்கிறோம். அவசர தேவைகளுக்கு மட்டுமே சென்னை, மதுரை, பெங்களூரூ போன்ற நகரங்களில் துணிகள் வாங்குகிறோம். இதனால் மாதம் முழுவதும் சூரத் செல்வது, வருவது என எப்போது நாங்கள் ரயில் பயணத்தில் தொடர்புடன் தான் இருப்போம். தூத்துக்குடியில் இருந்து அருப்புகோட்டை இருப்பு பாதை வழித்தடத்தில் சில்லாநத்தத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். 


தூத்துக்குடி: புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

மேலும், ஆயத்த ஆடை பூங்கா என்பதை ஆயத்த ஆடை சந்தையாக மாற்றித் தரும்படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான பணிகள் துரிதமான நடந்து வருவதாக அவரும் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வாரந்தோறும் சந்தை கூடுவது வழக்கம். அதே போல், இங்கு சுமார் 300 கடைகள் வரை கட்டி சந்தை அமைத்தால் உற்பத்தியாளர்களுக்கும், வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளுக்கும் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வது எளிதாக இருக்கும் என்றார்.

ஆயத்த ஆடைகளில் தற்போது ஆரி வேலைப்பாடுகள் என்ற ஆடை அலங்காரப்பணிகள் அதிகமாக நடந்து வருகிறது. ஆரி வேலைப்பாடுகள் என்பது நூல் கோக்காமல் ஊசி மூலம் நூல் எடுத்துச் செய்வது தான். தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப அனைத்து மாறி விட்டன. திருமணம், திருவிழாக்களில் பங்கேற்க பெண்கள் அதிகம் தேர்வு செய்வது ஆரி வேலைப்பாடுகள் கொண்டு ஆடைகளை தான். பட்டுப் புடவை, காட்டன் புடவை மற்றும் சுடிதாரில் அவற்றின் நிறம், டிசைனுக்கு ஏற்ப ஆரி வேலைப்பாடுகள் செய்ய ரூ.1300 முதல் ரூ.50,000 வரை வாங்குகிறோம். இந்த ஆரி வேலைப்பாடுகளுக்கு இங்கு தொழிலாளர்கள் இல்லாததால் மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இங்கு ஆயத்த ஆடை சந்தை அமைக்க வேண்டும். மின்சார மானியம் வழங்கினால், ஆயத்த ஆடை தொழில் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆரி வேலைப்பாடு செய்து  வரும் தொழிலாளர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget