மேலும் அறிய

விளைபொருட்களை தரம் குறைந்தது என அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள் - வேதனையில் விவசாயிகள்

கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, குதிரைவாலி, எள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் கொள்முதல் பொதுவிநியோக திட்டத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் அதிகம். வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயம் இருக்கிறது.


விளைபொருட்களை தரம் குறைந்தது என அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள் - வேதனையில் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் பயிரிடப்பட்ட சிறுதானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், கடந்த இருபது நாட்களாக அறுவவடை செய்யப்படுகிறது. உளுந்து, பாசி,கம்பு, வெள்ளைச் சோளம், குதிரைவாலி, கொத்தமல்லி என முதற்கட்டமாக அறுவடை செய்யப்படுகிறது. பருவம் தவறி பெய்த மழையால் களத்துமேட்டில் விளைபொருட்கள் கறுத்து பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் தரம் குறைந்த விளைபொருட்கள் என்று கூறி அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். வேறுவழியின்றி விவசாயிகள் அதனை விற்க வேண்டி உள்ளது. அதனை பதப்படுத்தி சந்தையில் பெரும் லாபத்தில் விற்கின்றனர்.


விளைபொருட்களை தரம் குறைந்தது என அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள் - வேதனையில் விவசாயிகள்

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அதனை கூடுதல் விலைக்கு எவ்வித தரகுமின்றி விற்பனை செய்ய வேளாண் வணிகத்துறை கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது. விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்து தனியார் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது. கடந்த பல ஆண்டுகளாக நெல், கரும்பு மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகிறது.


விளைபொருட்களை தரம் குறைந்தது என அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள் - வேதனையில் விவசாயிகள்

கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்வது கிடையாது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடைகின்றனர். உழுது பாடுபட்டு உண்ணாமல் கொள்ளாமல் பசி பட்டினியுடன் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மிஞ்சியது நஸ்டமும் ஏமாற்றமுமேயாகும். வியாபாரிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டுகொள்ளாமல் தமிழக வேளாண் வணிகத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.தவிர தனியார் வியாபாரிகளிடம் கொள்முதல் விளைபொருட்கள் புள்ளி விபரங்களை பெற்றுக் கொண்டு பல ஆயிரம் டன் வினைபொருட்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவிக்கிறது.


விளைபொருட்களை தரம் குறைந்தது என அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள் - வேதனையில் விவசாயிகள்

விவசாயிகளுக்கு உதவுவதற்காக துவங்கப்பட்ட வேளாண் வணிகப் பிரிவு எவ்வித செயல்பாடுமின்றி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளாவர். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு பொதுவிநியோக திட்டத்தில் இலவசமாக அரிசி வழங்குவதுபோல், இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளை அரசு ஈடுகட்டுவது போல் கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, குதிரைவாலி, எள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் கொள்முதல் பொதுவிநியோக திட்டத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget