மேலும் அறிய

வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட துணை நீதிமன்றத்தில் வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சுதந்திர போராட்டத்துக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் புதிய உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி திறந்து வைத்தார்.  


வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம்  சுதந்திரப் போராட்ட தியாகிகள் அதிகம் வாழ்ந்த பகுதியாக உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  துணை நீதிமன்றம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சுதந்திர போராட்டத்துக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை. இந்த பகுதியில் உள்ள வழக்குகள் கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் இணைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை  ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் அசாரணை வெளியிடப்பட்டது.


வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம்

அதன்படி ஓட்டப்பிடாரம் - குறுக்குச்சாலை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசும்போது, "ஓட்டப்பிடாரம் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் சிறப்பாக திறக்கப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரானார்  ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். 


வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம்

பின்னர் ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் கோவில்பட்டிக்கு மாறுதலாகி சென்றுவிட்டது. தற்போது ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம் சிறப்பாக செயல்பட உள்ளது. இந்த நீதிமன்றத்துக்கு சுமார் 1,500 குற்றவியல் வழக்குகளும், சுமார் 300 உரிமையில் வழக்குகளும் மாற்றம் செய்யப்பட உள்ளது. 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் தனியார் கட்டிடத்திலே நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவிலே சொந்த கட்டிடத்தில் செயல்படும். அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார்" என்றார்.


வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம்

விழாவுக்கு முன்னிலை வகித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பேசும்போது, "வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்துக்கு கூடிய விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலமாக சொந்த கட்டிடம் கட்டப்படும். மேலும் அரசு போக்குவரத்து கழக மேலாளரை அழைத்து எங்கெங்கு பேருந்து வசதி வேண்டுமோ அங்கு செய்யப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்த நீதிமன்றம் இன்னும் 2 வருடங்களிலோ அல்லது 3 வருடங்களிலோ புதிய வளாகத்தில் அமையும். அந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வேன்" என்றார்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்துக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உப்பட்ட முப்பலிவெட்டி பகுதியில் அரசு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தைனை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் செல்வகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரீத்தா, தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி சந்தீஸ், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
Embed widget