மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கான அனைத்து பலன்களையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்- ராமதாஸ்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறி உள்ளதாவது: 

தமிழக அரசு மருத்துவத் துறையில் 17 ஆயிரம் பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13,000 பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

4 மாத கால போராட்டம்

நோயாளிகளிடம் அக்கறையுடனும், கருணையுடனும் நடந்து கொள்ளும் செவிலியர்கள் மனப்பூர்வமாக பணியாற்ற வேண்டுமானால் அவர்களுக்கான மனநிறைவான ஊதியம் நியாயமானதாக வழங்கப்பட வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்பவர்களுக்கு  குறைவான ஊதியம் வழங்கப்படுவது அநீதி ஆகும். எனவேதான் பணி நிரந்தரம்,  சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாத காலமாக  பல்வேறு போராட்டங்களை ஒப்பந்த செவிலியர்கள் நடத்தி வந்தனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2015-ல் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்களுக்கு உரிய பலன்கள் வேண்டி வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய பலன்களையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்க் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தில் செவிலியர்களுக்கான பலன்களை வழங்க நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறிய தமிழக அரசு தரப்பு வாதத்தை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க முடியாது என கூறினர். 

8,300-க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் இல்லாமல்

உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தலை தொடர்ந்து 4 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை 3,800 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் 8,300-க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

தற்போதும் தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கொரோனா காலகட்டங்களில் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து மருத்துவ சேவையாற்றிய இந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்கள் தொகை அதிகரிப்பும்,  நோய்களின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில் செவிலியர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது.

உடனே பணி நிரந்தரம்

எனவே காலிப் பணியிடங்கள் மட்டுமல்லாது தேவைப்படும் மருத்துவமனைகளில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கான அனைத்து பலன்களையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
பள்ளி திறந்த நாளே மாணவர்கள் கையில் புத்தகம்: மலரும் புன்னகைக்கு ஏற்பாடுகள் தீவிரம்
பள்ளி திறந்த நாளே மாணவர்கள் கையில் புத்தகம்: மலரும் புன்னகைக்கு ஏற்பாடுகள் தீவிரம்
சிபிஎஸ்இ புதிய மொழிக் கொள்கையால் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிக்கு ஆபத்து; கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்
சிபிஎஸ்இ புதிய மொழிக் கொள்கையால் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிக்கு ஆபத்து; கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்
CBSE 12th Result 2026: எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்; எப்போது பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? எப்படி காண்பது?
CBSE 12th Result 2026: எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்; எப்போது பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? எப்படி காண்பது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
"வெற்றியை நோக்கி நாம் தமிழர் கட்சி” கருத்துக் கணிப்பில் மகிழ்ச்சி தகவல்..!
West Bengal Exit Poll: மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!
'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் EPS..!
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
TN Exit Poll Results : ”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
Embed widget