மேலும் அறிய

6 வருடத்தில் 11 பேர் உயிரை காவு வாங்கிய தாமிரபரணி மேம்பாலம் மீண்டும் சேதம் - நிரந்தர தீர்வு எப்போது?

வல்லநாடு பகுதியில் உள்ள பாலம் கட்டப்பட்ட பின்பு, கடந்த 6 வருடத்தில் இந்த இடத்தில் மட்டும் 11 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு பாலம் மீண்டும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


6 வருடத்தில் 11 பேர் உயிரை காவு வாங்கிய தாமிரபரணி மேம்பாலம் மீண்டும் சேதம் - நிரந்தர தீர்வு எப்போது?

தாமிரபரணி ஆறு மேம்பாலம்:

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும்.

அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.


6 வருடத்தில் 11 பேர் உயிரை காவு வாங்கிய தாமிரபரணி மேம்பாலம் மீண்டும் சேதம் - நிரந்தர தீர்வு எப்போது?

தொடர்ந்து சேதமடையும் பாலம்:

இந்த சாலை அமைக்கப்பட்ட நாளில் இருந்தே தொடர்ந்து பல்வேறு புகார்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதுவரை 7 முறை பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை.இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாலத்தின் இரு பகுதியையும் ரூபாய் 4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

அதன்பின்னர் தொடர்ந்து பல முறை இந்த பாலம் சேதமடைந்தது. இந்த நிலையில் கடந்த 25.9.22 அன்று ரூபாய் 13.22 கோடி மதிப்பில் இரு புறமும் உள்ள பாலத்தில் மேல்தளம், சாலைகள் சீரமைத்தல் மற்றும் பாலத்தை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த பாலப்பணிகள் ஒரு வருட காலத்தில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வருட காலத்தை தாண்டியும் இந்த பாலப்பணிகள் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை.


6 வருடத்தில் 11 பேர் உயிரை காவு வாங்கிய தாமிரபரணி மேம்பாலம் மீண்டும் சேதம் - நிரந்தர தீர்வு எப்போது?

6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு:

இதற்கிடையில் இன்று ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வரும் சாலையில் திடீரென்று பாலம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பாலத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருநெல்வேலி தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தி போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு மட்டும் கடந்த 6 வருடத்தில் இந்த இடத்தில் மட்டும் 11 பேர் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்.. கலக்கும் இந்திய அணி!
IND vs ENG Semi Final LIVE Score: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்.. கலக்கும் இந்திய அணி!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்.. கலக்கும் இந்திய அணி!
IND vs ENG Semi Final LIVE Score: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்.. கலக்கும் இந்திய அணி!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget