மேலும் அறிய

உயிர்க்கோழியின் தோலை உரித்து கொடூரம்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர் கைது!

கறிகடையில் வேலை பார்க்கும் ஒருவர் கோழியை உயிருடன் தோல் உரித்து துண்டு துண்டாக வெட்டி துன்புறுத்தி இறைச்சி ஆக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கறிகடையில் வேலை பார்க்கும் ஒருவர் கோழியை உயிருடன் தோல் உரித்து துண்டு துண்டாக வெட்டி துன்புறுத்தி இறைச்சி ஆக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளையைச் சேர்ந்த வாலிபர் மனு. கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நபர், கோழி உயிருடன் இருக்கும் போது அதன் தோலை உரித்து கொடூரமாக துடிக்க துடிக்க வெட்டி இறைச்சி ஆக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோ தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

உயிர்க்கோழியின் தோலை உரித்து கொடூரம்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர் கைது!
இந்த கடையில் இறைச்சி வாங்க வந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சியில் எந்த மனவருத்தமும் இல்லாமல் மிகவும் கொடூரமாக சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார் அந்த இளைஞன். இறைச்சிக் கடைகளில் கோழியின் தலையை துண்டித்து உயிர் போன பிறகு தோல் உரிக்கப்பட்டு இறைச்சி துண்டுகளாக வெட்டப்படுவது வழக்கம். ஆனால் அந்த வாலிபர் இரக்கமே இல்லாமல் மொபைல் போனை பார்த்து சிரித்து கொண்டே இந்த கொடூரத்தை நிகழ்த்தி உள்ளார். உயிருடன் தோலை உரித்து துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டும் போது கோழி கதறி அழுவதும், துடி துடிப்பதும் இந்த காட்சிகளில் பதிவாகி உள்ளது.


உயிர்க்கோழியின் தோலை உரித்து கொடூரம்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர் கைது!

அவர் இங்கு தொடர்ந்து இந்த கொடூர குற்றத்தை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மனு வை கொல்லங்கோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாம் என்னதான் வித விதமாக கோழிகளை சமைத்து ருசித்து உண்டால்லும் கூட ஒரு உயிரை சித்திரவதை செய்வது தவறு என்பதை மனித இனம் நினைவில் கொள்ள வேண்டும். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியவில்லை இந்த கொடூர கொலையை.


கேரள மலை பாதையில் பைக் ரைட் சென்ற இளைஞர்கள் மீது உருண்டு வந்த பாறை மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
 
கேரளா மிகுந்த மலைவளம் மிக்க மாநிலம் இங்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன இந்த மலைப்பாதைகளில் இருசக்கர வாகனம் மூலம் சாகச பயணம் மேற்கொள்வது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று அப்படியான ஒரு சாகச பயணம் சோகத்தில் முடிந்துள்ளது.
 

உயிர்க்கோழியின் தோலை உரித்து கொடூரம்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர் கைது!
 
 
தாமரசேரி அருகே மலைப்பாதை வழியாக நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது, முன்னர் இரண்டு நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்க, பின்னர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்தபடி சென்று கொண்டிருந்தனர். இதனிடையே திடீரென எதிர்பாராத விதமாக முன்னர் பைக்கை ஓட்டிச் சென்றவர்கள் மீது மேல் இருந்து உருண்டோடி வந்த பாறை மோதி இருவரும் பைக்கில் இருந்து அருகில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கில் பின்னர் அமர்ந்து வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் செல்லும் போது மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பாறைக்கல் மோதி இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின் பகுதியில் இருந்தவரையும் தூக்கி வீசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மாதம் 16 ஆம் தேதி நடந்த இந்த விபத்தின் காட்சிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்.

உயிர்க்கோழியின் தோலை உரித்து கொடூரம்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர் கைது!
 
வயநாடு பகுதிக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் முன் சென்ற இருசக்கர வாகனம் பாறைக்கல் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இரு சக்கர வாகனத்தின் பின் இருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஒட்டியவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்து உள்ளார்.தொடர் விசாரணையில் உயிரிழந்தவர் மலப்புரம் பகுதியை சார்ந்த அபிநவ் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget