மேலும் அறிய

நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மழைக்கால நிவாரண உதவிபெறுவதற்கு தொழிலாளர் நலத்துறைமூலம் உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்துள்ளார்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி ராஜபாண்டிநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உப்பள தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி உப்பள தொழிலாளர்களிடம், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது உப்பள தொழிலாளர்கள் பேசும் போது, மழைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே நேரத்தில் குறைந்த அளவிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது. ஆதார் எண்ணுடன் செல்போன் இணைக்காமல் இருத்தல், வங்கி கணக்கு விவரம் சரியில்லாததாலும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் நிவாரணம் பெறுவதற்கு யாரை அணுகுவது என்று தெரியவில்லை. இதற்கு ஒரு முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்ஷன் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் நலவாரிய அட்டை வழங்க வேண்டும். உப்பளங்களில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ராஜபாண்டி நகர் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

இதற்கு பதிலளித்து ஆட்சியர் செந்தில்ராஜ் பேசுகையில், தமிழ்நாட்டின் 70 சதவீத உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில்தான் நடக்கிறது. மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உப்பளங்கள் உள்ளன. உப்பளத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். உப்பள தொழிலாளர்களுக்கு வருகிற 6, 7-ந் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையின் முயற்சியுடன் சங்கர நேத்ராலயா போன்ற தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்கள் 9 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முகாம்களில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், ஆதார் எண் இணைப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அயோடின் முக்கியமானது. அங்கன்வாடி மையம் விரைந்து அமைக்கப்படும். நடமாடும் ரேஷன் கடை மூலம் உடனடியாக பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

இந்நிலையில் உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) செயலாளர் சங்கரன் விடுத்துள்ள அறிக்கையில், உப்பள தொழிலாளர்களுக்காக போராட்டங்கள் நடத்தக்கூடிய பல்வேறு அமைப்புகள் உள்ளன. இதில் பிரதானமாக உப்பள தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இச்சங்கங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஒரே ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவரையும், தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளர்களுக்கு எவ்வித முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியரின் இச்செயலுக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது என  தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
Embed widget