மேலும் அறிய

நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மழைக்கால நிவாரண உதவிபெறுவதற்கு தொழிலாளர் நலத்துறைமூலம் உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்துள்ளார்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி ராஜபாண்டிநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உப்பள தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி உப்பள தொழிலாளர்களிடம், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது உப்பள தொழிலாளர்கள் பேசும் போது, மழைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே நேரத்தில் குறைந்த அளவிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது. ஆதார் எண்ணுடன் செல்போன் இணைக்காமல் இருத்தல், வங்கி கணக்கு விவரம் சரியில்லாததாலும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் நிவாரணம் பெறுவதற்கு யாரை அணுகுவது என்று தெரியவில்லை. இதற்கு ஒரு முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்ஷன் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் நலவாரிய அட்டை வழங்க வேண்டும். உப்பளங்களில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ராஜபாண்டி நகர் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

இதற்கு பதிலளித்து ஆட்சியர் செந்தில்ராஜ் பேசுகையில், தமிழ்நாட்டின் 70 சதவீத உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில்தான் நடக்கிறது. மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உப்பளங்கள் உள்ளன. உப்பளத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். உப்பள தொழிலாளர்களுக்கு வருகிற 6, 7-ந் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையின் முயற்சியுடன் சங்கர நேத்ராலயா போன்ற தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்கள் 9 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முகாம்களில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், ஆதார் எண் இணைப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அயோடின் முக்கியமானது. அங்கன்வாடி மையம் விரைந்து அமைக்கப்படும். நடமாடும் ரேஷன் கடை மூலம் உடனடியாக பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


நிவாரண உதவிபெறுவதற்கு உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் - தூத்துக்குடி ஆட்சியர்

இந்நிலையில் உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) செயலாளர் சங்கரன் விடுத்துள்ள அறிக்கையில், உப்பள தொழிலாளர்களுக்காக போராட்டங்கள் நடத்தக்கூடிய பல்வேறு அமைப்புகள் உள்ளன. இதில் பிரதானமாக உப்பள தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இச்சங்கங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஒரே ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவரையும், தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளர்களுக்கு எவ்வித முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியரின் இச்செயலுக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது என  தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
Embed widget