மேலும் அறிய

பள்ளி மாணவர்கள் பிரச்னையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ தலையிடக்கூடாது- சபாநாயகர் அப்பாவு தடாலடி

பள்ளியில் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம், மாணவர்கள் மோதல் விவகாரத்தில் தலைமை ஆசிரியர் தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழக அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கோயம்புத்தூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டை வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் சுமார் 6361 மாணவர்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நமது மாவட்டத்தில் 69 கல்லூரிகளில் 6361 இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்றார். தொடர்ந்து சமீபகாலமாக நெல்லை பள்ளிகளில் மாணவர்களினையே நடக்கும் மோதல் குறித்து கேட்டபோது, பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. ராதாபுரத்தில் ஒரு பள்ளியில் பிரச்னை செய்த மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும் நாங்கள் ஒரே வகுப்பில் படிக்கிறோம், இன்று சண்டை போட்டால் நாளை சேர்ந்து கொள்வோம் பிறகு ஏன் இதனை பெரிதுப்படுத்துகிறீர்கள் என்றார்கள். எனவே இதுபோன்ற விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், நமது மாவட்டத்தில் எங்கேயும் சாதி சண்டை இல்லை. அப்படி இல்லாததால் பள்ளியில் குழந்தைகள் சண்டை போடுவதை பெரிதாக்க பார்க்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்த போது தலைமை ஆசிரியர் முடிவு எடுக்க சொல்ல வேண்டும். மாணவர்கள் பிரச்சனையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமும் தலையிடக்கூடாது.  தலைமை ஆசிரியர் தான் இறுதி முடிவுடுக்க வேண்டும்.


பள்ளி மாணவர்கள் பிரச்னையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ தலையிடக்கூடாது- சபாநாயகர் அப்பாவு தடாலடி

பள்ளியில் நடந்த சம்பவங்களை அவர்களே முடிவெடுத்து கொள்வார்கள், பள்ளிக்கு வெளியே வேறு நோக்கத்தோடு பிரச்னை நடந்தால் அதில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டால் சரியாக இருக்கும். ஆசிரியர்கள் தான் குழந்தைகளை அரவணைத்து செல்ல முடியும். தவறுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாம். இடைநீக்கம் செய்யலாம், நிரந்தரமாகவும் நீக்கலாம் என்றார். அவர்களாகவே மேல் நடவடிக்கை தேவை என மாவட்ட நிர்வாகத்திடமோ, காவல்துறையிடமோ வந்தால் தான் தலையிட வேண்டும் என்றார். தொடர்ந்து அதிமுக நிர்வாகி தொடுத்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட்டிருப்பது குறித்து கேட்டபோது, காவல்துறை அழைத்தால் விசாரணைக்கு செல்வேன். நீதிமன்றத்திற்கு சென்றால் சட்டப்படி ஆஜராகி எனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன். அதில் ஒன்றும் வருத்தமில்லை. இது நம்ம நாடு, நமது சட்டம், நமது மக்கள், நமது ஜனநாயகம். அப்பாவுக்கும் ஒன்று தான். உங்களுக்கும் சட்டம் ஒன்றுதான். எல்லோருக்கும் சமமானது சட்டம் எனவே சட்டத்தை மதித்து நடப்பேன் என்று தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
Embed widget