Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பதிவு மூலம் மாதம்பட்டி ரங்கராஜை வசமாக மாட்டிவிட்டுள்ளார். அவரைப் போலவே அவரது மகனும் செய்வதாக அவர் போட்டோவோடு போட்ட பதிவை பார்க்கலாம்.

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ள பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று ரங்கராஜ் கூறியிருந்த நிலையில், அதற்குப் பிறகு அவர் அதைப் பற்றி பேசவே இல்லை. இதைத் தொடர்ந்து, டிஎன்ஏ சோதனைக்கு தைரியமிருந்தால் வாருங்கள் கணவரே என ஜாய் கிரிசில்டா சமீபத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை அதற்கும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், தனது குழந்தை அவனது அப்பாவைப் போலவே மேனரிசம் செய்வதாகக் கூறி தற்போது ஒரு புகைப்படத்துடன் பதிவை பேட்டுள்ளார். அந்த பதிவு குறித்து தற்போது பார்க்கலாம்.
“அப்பாவைப் போலவே மகன்“ - ஜாய் கிரிசில்டாவின் பதிவு என்ன.?
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ள பதிவில், டிஎன்ஏ வேண்டும் என்று கேட்ட தந்தைக்கு மகனே ஆப்பு வைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். குழந்தையை புகைப்படம் எடுத்தபோது, அவனது அப்பா(ரங்கராஜ்) போலவே கைகளை வைத்துள்ளான் எனவும், “இதை விட வேறு என்ன Proof வேண்டும், சிக்கிட்டாரு“ எனவும் ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார். மேலும், அப்பாவைப் போலவே மகன், ஒரே ஜீன் எனவும் கூறியுள்ளார்.
View this post on Instagram
ஜாய் கிரிசில்டா-மாதம்பட்டி ரங்கராஜ் இடையே நடப்பது என்ன.?
சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஜாய் கிரிசில்டா அறிவித்தார். மேலும், தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை மகளிர் ஆணையத்தின் முன்பாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அந்த பதிவிற்கு பதிலளித்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா கூறியதை திட்டவட்டமாக மறுத்ததுடன், அவரது குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அப்படி பரிசோதித்து, அதில் தான் தான் குழந்தைக்கு தந்தை என்று தெரியவந்தால், குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்கத் தயார் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், தைரியமிருந்தால் டிஎன்ஏ சோதனைக்கு வருமாறு மாதம்பட்டி ரங்கராஜை அழைத்திருந்தார் ஜாய் கிரிசில்டா. ஆனால் அதற்கும் பதில் ஏதும் கிடைக்காத நிலையில் தான், தற்போது புதிய பதிவை போட்டுள்ளார். இப்போது, மாதம்பட்டி ரங்கராஜ் என்ன செய்யப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.





















