மேலும் அறிய

குற்றாலம் மெயின் அருவி அருகே தீக்கிரையாகிய கடைகள்..! உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு செய்த ஆணையர்கள்..!

"குற்றாலத்தில் மெயின் அருவிக்கு  செல்லும் வழியில்  தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஆணையர்கள் டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா, அருண் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு"

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இருந்த கடைகள்  ஏலம் விடப்பட்டு சுமார் 40 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டு தீக்கிரையானது.  இந்த நிலையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் ஐய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். இதனையொட்டி அதே இடத்தில் மீண்டும் கடைகள் அமைக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வந்தது.

இந்த தீ விபத்தால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு கோவில் நிர்வாகம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் குற்றாலம் கோயில் நிர்வாகம் அந்த கடைகளை மறு ஏலம் விடுவதை தடை செய்யவேண்டும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த சூழலில் இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின்போது கடை ஏலத்தை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான சம்பவ இடத்தில் மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா மற்றும் அருண்சுவாமிநாதன் ஆகிய இருவரையும் நீதிமன்ற ஆணையராக நியமித்து நீதிபதி இருவரும் நேரில் சென்று ஆய்வு நடத்தி இது தொடர்பான அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


குற்றாலம் மெயின் அருவி அருகே தீக்கிரையாகிய கடைகள்..! உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு செய்த ஆணையர்கள்..!

அதன் அடிப்படையில், மூத்த வழக்கறிஞர் டி எஸ் ஆர் வெங்கட்ரமணா மற்றும் அருண்சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய குழு  நேற்று குற்றாலத்தில் தீ விபத்து நடந்த இடத்தில்   நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வரும் 17-ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடக்க இருப்பதால் அதற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையர்கள் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட விசாரணையில் தீர்ப்பு இருக்கும் எனவும் தெரிய வருகிறது. இந்த ஆய்வின்போது, குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் உதவி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget