மேலும் அறிய

ED Raid: அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை.. செல்வ பெருந்தகை குற்றச்சாட்டு..!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர் சிபிஐ விசாரணை நடப்பதாக மறுக்கிறார்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அணைக்கு மேல் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த போது  காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது போலீசார் கூட்டத்தை கலைக்க விரட்டிய போது  17 தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் இறந்த தினம் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று உயிர்நீத்த 17 தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி நெல்லை மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் தனியார் அமைப்புகள் என 18 அமைப்பினர் அஞ்சலி செலுத்துகின்றனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் பகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



ED Raid: அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை.. செல்வ பெருந்தகை குற்றச்சாட்டு..!

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தாமிரபரணி நதிக்கரையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ செல்வ பெருந்தகை கூறும் பொழுது, உரிமைக்காக போராடிய போராளிகள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம். தாமிரபரணி நிதியில் உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் உயிர்நீத்த 17 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்வோம்.

மணிப்பூரில் அங்குள்ள மக்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். மணிப்பூர் மக்களின் உரிமையை மீட்டெடுப்பது தான் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய பணியாக உள்ளது. ஜாதியாக, மதமாக, இனமாக மக்களை பிரித்தாலும் பாஜகவிற்கு விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் ஒருபோதும் இந்திய மக்கள் ஏமாற மாட்டார்கள். வருகின்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். தீவிரவாதிகள் இருந்து நாட்டை அச்சுறுத்தும் போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது தப்பில்லை. அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர் சிபிஐ விசாரணை நடப்பதாக மறுக்கிறார். இதே நடைமுறைதான் அமைச்சர் பொன்முடிக்கும் பொருந்தும். நீதிமன்ற நிலவையில் இருக்கும் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத்துறை என்.ஐ.ஏ போன்றவைகள் மூலம் செய்யப்படும் மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணிய மாட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget