மேலும் அறிய

நியாய விலை கடையில் தரமற்ற அரிசி விநியோகம் - கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்

பலமுறை நீரில் சுத்தம் செய்து சமைத்தாலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சட்டப் பேரவையில் நடந்த  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய துறையின் அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதில், முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த பலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதோருக்கு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.


நியாய விலை கடையில் தரமற்ற அரிசி  விநியோகம் -  கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்

இதுபற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இந்த நிலையில்,  முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தான் நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வழங்கியதால் கடை முன்பாக அரிசியை கொட்டிய பொதுமக்கள், அங்கு போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் உணவுத்துறை அமைச்சரின் வாக்குறுதி காற்றோடு கலந்ததாக பார்க்கப்படுகிறது.


நியாய விலை கடையில் தரமற்ற அரிசி  விநியோகம் -  கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தான் நியாய விலைக்கடையில் விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல், கண்ணத்தான் உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக இங்கு உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று அங்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்ற முறையிலும் புழு, பூச்சி, வண்டுகள் மற்றும் கற்கள் அதிக அளவில் கிடந்ததாலும் அரிசியில் துர்நாற்றம் வந்ததாலும் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசியினை கீழே கொட்டி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு அங்கிருந்து  சென்று விட்டனர். மேலும், பொதுமக்கள் யாரும் அரிசியை வாங்காமல் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.


நியாய விலை கடையில் தரமற்ற அரிசி  விநியோகம் -  கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்

மக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசி கொட்டிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி சமைத்து உண்ண முடியாதவாறு அளவில் பெரியதாக உள்ளது. மேலும் அரிசியில் தூசி, சிறு கற்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. இதுதவிர இந்த அரிசியை பலமுறை நீரில் சுத்தம் செய்து சமைத்தாலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தரமற்ற முறையில் வழங்கப்பட்ட அரிசியை திரும்பப் பெற்று முறையான நல்ல அரிசி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Embed widget