மேலும் அறிய

மக்களே.. 10 ஆண்டுகளுக்கு பின் அனுமதி..! பாபநாசம் பாண தீர்த்த அருவியை பார்க்க ரெடியாகுங்க..!

நெல்லையில் பிரபலமான பாபநாசம் பாண தீர்த்த அருவியை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையார் அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அருவியை வான தீர்த்த அருவி என்றே அழைப்பதுண்டு.

பாபநாசம் பாண தீர்த்த அருவி:

ராமன் தனது தந்தையான தசரதருக்கு இங்கு தான்  இறுதிச் சடங்கு செய்து திதி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றது. அதே போல அகத்திய முனிவரும் இங்கு தான் நீராடியதாகவும் கூறப்படுகிறது.. பின் நாட்களில் இந்த வான தீர்த்த அருவியானது பாண தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து காடுகளுக்கு நடுவே ஊடுருவி வரும் நிலையில் பல்வேறு மூலிகைகளை தழுவி வெள்ளமாக வந்து பாயும் இந்த அருவியில் குளிப்பதால் தீராத நோயும் தீரும், உடலுக்கு மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருக்கிறது.


மக்களே.. 10 ஆண்டுகளுக்கு பின் அனுமதி..! பாபநாசம் பாண தீர்த்த அருவியை பார்க்க ரெடியாகுங்க..!

10 ஆண்டுகள் தடை:

இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு காரையார் அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். காரையார் அணையில் இருந்து 20 நிமிட படகு சவாரி சென்று அங்கிருந்து 10 நிமிடம் மலையேற்றம் செய்து அருவியை அடையும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு மீண்டும் அங்கிருக்கும் படகில் கரை வந்து சேரும் விதமாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக காரையாறு அணையோரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களாலும் வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் படகு சவாரிக்காக அணையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளும், அணையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இது பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இது தொடர்பாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்க வலியுறுத்தி வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கைகளும் வைக்கப்பட்டது.


மக்களே.. 10 ஆண்டுகளுக்கு பின் அனுமதி..! பாபநாசம் பாண தீர்த்த அருவியை பார்க்க ரெடியாகுங்க..!

இந்த சூழலில் 10 ஆண்டுகளை கடந்து தற்போது வரும் 18 -ந் தேதி முதல் பாண தீர்த்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறுகையில்,, சுற்றுலா பயணிகள் பாணதீர்த்த அருவிக்கு செல்ல நபர் ஒருவருக்கு 500 ரூபாய் செலுத்தி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் மூலமாக வாகனத்திற்கு 10 பேர் வீதம் அழைத்து செல்லப்பட உள்ளனர், காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்குள் முண்டந்துறை வன அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பாணதீர்த்த அருவியை பார்க்கும் வியூ பாயிண்ட் வரை சென்று சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்து மீண்டும் முண்டந்துறை வன அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

அருவியில் குளிக்கத் தடை:

அதேசமயம் அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது. அருவிக்கு அருகில் செல்ல வேண்டுமென்றால் காரையார் அணையை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டுமென்றால் நிச்சயம் படகு சவாரி தொடங்கினால் மட்டும் தான் சாத்தியமாகும். ஆனால் தற்போது நெல்லை மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் அணையில் தண்ணீர் மிக குறைவாகவே உள்ளது.

எனவே மாற்று வழியாக சொரிமுத்து அய்யனார் கோயில் வழியாக வனத்துறை வாகனம் மூலம் அருவிக்கு சற்று தொலைவில் அழைத்து சென்று அருவியை காட்ட வனத்துறை திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் அணைகளுக்கு நடுவே படகு சவாரி மூலம் மீண்டும் இயற்கையின் அழகை ரசித்து கொண்டு அருவியை அடையும் விதமாக அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர். அதே போல நபர் ஒன்றுக்கு 500  ரூபாய் என்பது அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.