மேலும் அறிய

தூத்துக்குடியில் முடிவுக்கு வந்த உப்பு உற்பத்தி - விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கு சாதமான சூழ்நிலை காணப்பட்டதால் 80 சதவீதம் அளவுக்கு உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. ஆனால், உப்பு விலை குறைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பாண்டில் மழை குறுக்கீடு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்து சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


தூத்துக்குடியில் முடிவுக்கு வந்த உப்பு உற்பத்தி - விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

உப்பு உற்பத்தி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சக்கட்ட சீசனாக கருதப்படுகிறது.


தூத்துக்குடியில் முடிவுக்கு வந்த உப்பு உற்பத்தி - விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியது. அதுபோல இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் பெய்யவில்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை நிலவியது.இதன் காரணமாக மாவட்டத்தில் தற்போது வரை 80 சதவீதம், அதாவது 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளது. கடந்த ஆண்டு 60 சதவீதம் அளவுக்கு அதாவது 15 லட்சம் டன் அளவுக்கே உப்பு உற்பத்தி இருந்தது.


தூத்துக்குடியில் முடிவுக்கு வந்த உப்பு உற்பத்தி - விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

வடகிழக்கு பருவமழை தொடக்கம்:

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையிலும் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பருவநிலை முற்றிலும் மாறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.இதையடுத்து மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது.


தூத்துக்குடியில் முடிவுக்கு வந்த உப்பு உற்பத்தி - விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் தனபாலன் கூறும்போது,தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கு சாதமான சூழ்நிலை காணப்பட்டதால் 80 சதவீதம் அளவுக்கு உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. ஆனால், உப்பு விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு டன் உப்பு தரத்துக்கு ஏற்ப ரூ.2500 முதல் ரூ.3000 வரை விலை போனது.

ஆனால் இந்த ஆண்டு ரூ.1500 முதல் ரூ.2000 வரையே விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தென் பகுதியில் ஓரிரு இடங்களில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. அந்த பகுதிகளிலும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். மாவட்டத்தில் தற்போது சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் டன் உப்பு கையிருப்பில் உள்ளது. இது அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி தொடங்கும் பிப்ரவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றார்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget