மேலும் அறிய

”நெல்லையப்பா என்ன சோதனை இது” - கோவில் தேரோட்டம் துவங்கியதும் பதறிய பக்தர்கள்! என்ன நடந்தது?

”18 வருடத்தில் ஒரு வருடம் கூட இப்படி நடந்தது கிடையாது. இந்துசமய அற நிலையத்துறையின் மிகப்பெரிய செயல் குறைபாடு தான் காரணம்”

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனித் தேரோட்டம் 40 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழா என பெயர் பெற்றது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்களும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் வலம் வரும்.  இந்த தேர் கடந்த 1505 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் தேர் இயந்திரங்களின் துணையுடன் இயக்கப்படும் நிலையில் அதற்கு அடுத்தப்படியாக 3 வது பெரிய தேரான  நெல்லையப்பர் கோவில் தேர் முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே இயக்கப்படுகிறது. 


”நெல்லையப்பா என்ன சோதனை இது” - கோவில் தேரோட்டம் துவங்கியதும் பதறிய பக்தர்கள்! என்ன நடந்தது?

சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் 70 அடி உயரம் கொண்டது. இந்த தேர் ஒவ்வொரு வருடமும் சறுக்குக் கட்டை போடுதல், தடி போடுதல் ஆகியவற்றின் மூலம் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் ஓம் நமச்சிவாய உள்ளிட்ட கோசங்களுடன் இழுக்கும் போது தேர் மக்கள் வெள்ள கூட்டத்தில் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். இந்த நிலையில் இந்தாண்டு ஆனிப்பெருந்திருவிழாவான தேரோட்ட திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 518வது ஆனி தேரோட்டம் 21 ம் தேதி இன்று காலை துவங்கியது.

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ருஸ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர்,  துணை மேயர் அவர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து துவக்கினர். காலை 7.18 க்கு தேரானது இழுக்க துவங்கியம் துவங்கிய  ஒரு சில நிமிடங்களிலேயே தேரின் வடமானது அறுந்து விழுந்தது. 4 வடங்களில் 3 வடங்கள் அறுந்து விழுந்த நிலையில் அதனை சரிசெய்யும் பணி துவங்கியது. சரி செய்து மீண்டும் தேர் இழுக்கத்துவங்கியதும் இரண்டாவது முறையாக மீண்டும் அறுந்தது. பின் மாற்று வடம் கொண்டு வரப்பட்டு மூன்றாவது முறையாக தேர் நகரத்தொடங்கிய சற்று நேரத்திலேயே மூன்றாவது முறையாக தேர் வடமானது அறுந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். ”நெல்லையப்பா என்ன சோதனை இது” என புலம்பிய படி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மாற்று முயற்சியாக இரும்பு சங்கிலி மாற்றப்பட்டு தேர் இழுக்கப்பட்டு வருகிறது. 


”நெல்லையப்பா என்ன சோதனை இது” - கோவில் தேரோட்டம் துவங்கியதும் பதறிய பக்தர்கள்! என்ன நடந்தது?

இது குறித்து பக்தர் ஒருவர் கூறும் பொழுது, இருப்பது 4 வடம் அதில் 3 வடம் அறுந்து விட்டது. தொடங்கி 1 அடி கூட நகரவில்லை அறுந்து விட்டது. இது எவ்வளவு பெரிய அபசகுணம். 518 வருடத்தில் ஒரு வருடம் கூட இப்படி நடந்தது கிடையாது. இந்துசமய அற நிலையத்துறையின் மிகப்பெரிய செயல் குறைபாடு தான் காரணம்.  வடத்தை மாற்றுங்கள் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதை கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள் என்ன திருவிழா  நடத்துகின்றனர். உண்டியல் வைத்து வசூல் செய்கின்றனர் என்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget