மேலும் அறிய

”நெல்லையப்பா என்ன சோதனை இது” - கோவில் தேரோட்டம் துவங்கியதும் பதறிய பக்தர்கள்! என்ன நடந்தது?

”18 வருடத்தில் ஒரு வருடம் கூட இப்படி நடந்தது கிடையாது. இந்துசமய அற நிலையத்துறையின் மிகப்பெரிய செயல் குறைபாடு தான் காரணம்”

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனித் தேரோட்டம் 40 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழா என பெயர் பெற்றது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்களும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் வலம் வரும்.  இந்த தேர் கடந்த 1505 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் தேர் இயந்திரங்களின் துணையுடன் இயக்கப்படும் நிலையில் அதற்கு அடுத்தப்படியாக 3 வது பெரிய தேரான  நெல்லையப்பர் கோவில் தேர் முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே இயக்கப்படுகிறது. 


”நெல்லையப்பா என்ன சோதனை இது” - கோவில் தேரோட்டம் துவங்கியதும் பதறிய பக்தர்கள்! என்ன நடந்தது?

சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் 70 அடி உயரம் கொண்டது. இந்த தேர் ஒவ்வொரு வருடமும் சறுக்குக் கட்டை போடுதல், தடி போடுதல் ஆகியவற்றின் மூலம் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் ஓம் நமச்சிவாய உள்ளிட்ட கோசங்களுடன் இழுக்கும் போது தேர் மக்கள் வெள்ள கூட்டத்தில் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். இந்த நிலையில் இந்தாண்டு ஆனிப்பெருந்திருவிழாவான தேரோட்ட திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 518வது ஆனி தேரோட்டம் 21 ம் தேதி இன்று காலை துவங்கியது.

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ருஸ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர்,  துணை மேயர் அவர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து துவக்கினர். காலை 7.18 க்கு தேரானது இழுக்க துவங்கியம் துவங்கிய  ஒரு சில நிமிடங்களிலேயே தேரின் வடமானது அறுந்து விழுந்தது. 4 வடங்களில் 3 வடங்கள் அறுந்து விழுந்த நிலையில் அதனை சரிசெய்யும் பணி துவங்கியது. சரி செய்து மீண்டும் தேர் இழுக்கத்துவங்கியதும் இரண்டாவது முறையாக மீண்டும் அறுந்தது. பின் மாற்று வடம் கொண்டு வரப்பட்டு மூன்றாவது முறையாக தேர் நகரத்தொடங்கிய சற்று நேரத்திலேயே மூன்றாவது முறையாக தேர் வடமானது அறுந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். ”நெல்லையப்பா என்ன சோதனை இது” என புலம்பிய படி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மாற்று முயற்சியாக இரும்பு சங்கிலி மாற்றப்பட்டு தேர் இழுக்கப்பட்டு வருகிறது. 


”நெல்லையப்பா என்ன சோதனை இது” - கோவில் தேரோட்டம் துவங்கியதும் பதறிய பக்தர்கள்! என்ன நடந்தது?

இது குறித்து பக்தர் ஒருவர் கூறும் பொழுது, இருப்பது 4 வடம் அதில் 3 வடம் அறுந்து விட்டது. தொடங்கி 1 அடி கூட நகரவில்லை அறுந்து விட்டது. இது எவ்வளவு பெரிய அபசகுணம். 518 வருடத்தில் ஒரு வருடம் கூட இப்படி நடந்தது கிடையாது. இந்துசமய அற நிலையத்துறையின் மிகப்பெரிய செயல் குறைபாடு தான் காரணம்.  வடத்தை மாற்றுங்கள் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதை கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள் என்ன திருவிழா  நடத்துகின்றனர். உண்டியல் வைத்து வசூல் செய்கின்றனர் என்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Embed widget