மேலும் அறிய

பல் பிடுங்கிய விவகாரம்: வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வேறு சிங் உள்ளிட்ட 15 போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.  தொடர்ந்து அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு இந்த விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி யாக இருந்த பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல் துறையை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு தமிழக அரசால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் நான்கு  வழக்குகளை பதிவு செய்து  சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நான்கு வெவ்வேறு நபர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குகள்  தொடர்பான 1500 பக்க குற்றப்பத்திரிகையை  விசாரணை நடைபெறும்  நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி  ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 நபர்களும் ஆஜராகினர். தொடர்ந்து அவர்கள் அன்றே தாக்கல் செய்த பிணை மனு குறித்த விசாரணையில் முன்னாள் ஏ.எஸ்.பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உட்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி நெல்லை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1 நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவு பிறப்பித்தார். 

அதனை அடுத்து டிசம்பர் 26 ஆம் தேதிக்கும், தொடர்ந்து  ஜனவரி 10ஆம் தேதிக்கும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வேறு சிங் உள்ளிட்ட 15 போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகினர். குற்றச்சாட்டுகள் குறித்து பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்விகளை எழுப்பினார்.  அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்ட நீதிபதி திரிவேணி வழக்கு விசாரணையை இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் 15 பேர் ஆஜராகி இருந்த நிலையில் புகார் அளித்த வேதநாராயணன், சூர்யா, வெங்கடேஷ், அருண்குமார் உள்ளிட்டோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். பல்வீர்சிங் வழக்கு விசாரணை நேற்று வந்ததை யொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget