மேலும் அறிய

பல் பிடுங்கிய விவகாரம்: வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வேறு சிங் உள்ளிட்ட 15 போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.  தொடர்ந்து அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு இந்த விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி யாக இருந்த பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல் துறையை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு தமிழக அரசால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் நான்கு  வழக்குகளை பதிவு செய்து  சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நான்கு வெவ்வேறு நபர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குகள்  தொடர்பான 1500 பக்க குற்றப்பத்திரிகையை  விசாரணை நடைபெறும்  நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி  ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 நபர்களும் ஆஜராகினர். தொடர்ந்து அவர்கள் அன்றே தாக்கல் செய்த பிணை மனு குறித்த விசாரணையில் முன்னாள் ஏ.எஸ்.பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உட்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி நெல்லை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1 நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவு பிறப்பித்தார். 

அதனை அடுத்து டிசம்பர் 26 ஆம் தேதிக்கும், தொடர்ந்து  ஜனவரி 10ஆம் தேதிக்கும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வேறு சிங் உள்ளிட்ட 15 போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகினர். குற்றச்சாட்டுகள் குறித்து பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்விகளை எழுப்பினார்.  அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்ட நீதிபதி திரிவேணி வழக்கு விசாரணையை இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் 15 பேர் ஆஜராகி இருந்த நிலையில் புகார் அளித்த வேதநாராயணன், சூர்யா, வெங்கடேஷ், அருண்குமார் உள்ளிட்டோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். பல்வீர்சிங் வழக்கு விசாரணை நேற்று வந்ததை யொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget