மேலும் அறிய

Nellai: ஆக்கிரமிப்பு வீடுகளை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்..! செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய மக்கள்..!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு செல்போன் கோபுரங்களிலும் ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது நம்பி நகர் பகுதி. இந்த பகுதி நாங்குநேரி பேரூராட்சின் 1 வது வார்டாக உள்ளது.  மேலும் இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் நாங்குநேரி பெரிய குளத்தை ஆக்கிரமித்து அந்த பகுதியில் 14 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில் நாங்குநேரி பெரிய குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வருவாய் துறையினர் நில அளவையாளர்கள் காவல்துறை உதவியுடன் நம்பி நகர் பகுதிக்கு  அதிகாரிகள் வருகை புரிந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் வீடுகளை அளவீடு செய்யக்கூடாது என அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எங்களது வீடுகளை அப்புறப்படுத்தினால் அனைத்து குடும்பங்களுக்கும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தனர். இச்சூழலில் திடீரென அப்பகுதியைச் சேர்ந்த கணபதி, துரைப்பாண்டியன், மற்றொரு  துரைப்பாண்டியன் என மூன்று பேர் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகளை அளவீடு செய்யக்கூடாது. அதிகாரிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை காவல்துறையினர் கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்து மேலே ஏறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டமானது நீடித்தது. இந்த  நிலையில் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தற்காலிகமாக அளவீடு செய்வதை நிறுத்துவதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டமானது கைவிடப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இப்பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து அவரின் முடிவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அதன்பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கீழே இறங்கி வந்ததுடன் போராட்டமும் முடிவுக்கு வந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு செல்போன் கோபுரங்களிலும் ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget