மேலும் அறிய

சேரன்மகாதேவியில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வார்டு உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தலைவரின் நடவடிக்கை மற்றும் நிர்வாக சீர்கேடை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவரின் கணவர் தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும் கூறி ஆளும் கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களான 15 வது வார்டு தங்கராஜ், 10 வது வார்டு அன்வர் உசேன், 11 வது வார்டு பரக்கத்பேகம், 14 வது வார்டு செய்பு நிஷாபேகம், 18 வது வார்டு தேவி, 17 வது வார்டு மல்லிகா ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வாயில் கருப்பு துணி கட்டியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பரக்கத்பேகம் கூறும் பொழுது, ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளோம், அதற்கு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்படுகிறதே தவிர கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றி தரவில்லை,  தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளமான பகுதிகளை பார்வையிடுங்கள், நோய் தொற்றும் அதிகமாக உள்ளது என கூறி வருகிறோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர் இருக்கிறாரே தவிர அவரின் கணவரின் தலையீடு தான் இங்கு அதிகமாக உள்ளது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தான் கேட்கிறோம், அதை செய்து தர மறுப்பதோடு கவுன்சிலர்களை ராஜினாமா செய்ய வைத்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். வார்டு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதோடு நிர்வாகத்திற்கு வந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து முறையிட்டால் கவுன்சிலர்களை இங்கு மதிப்பதில்லை. எங்களது கோரிக்கையை சொன்னால் மனு எழுதி கொடுக்க சொல்லுகின்றனர். எங்களுக்கே இந்த  நிலை என்றால் பொதுமக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என்றனர். 


சேரன்மகாதேவியில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அதோடு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை சரி செய்வதற்கு பொதுமக்களிடமே பணம் வசூலித்து சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகம் செய்யும் அளவிற்கு உள்ளது. பேரூராட்சியின் வைப்பு நிதியை பயன்படுத்தாமல் அரசு பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.. சேரன்மகாதேவி பேரூராட்சி தலைவியின் கணவர் தலையீடு மற்றும் அவரின் அட்டூழியம் அதிகமாக இருப்பதால் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அதோடு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் எங்களது கோரிக்கைகளையும் புகாரையும் தெரிவித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை,  விரைவில் நடவடிக்கை இல்லையென்றால் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் மறுக்கப்படுவதோடு பெண் தலைவர் கணவரின் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறி ஆளுங்கட்சி உறுப்பினர்களே கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்து போராட்டத்தில்  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget