![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
20 ஆண்டுகளாக குழந்தையில்லாத ஏக்கம்...! விபரீத முடிவெடுத்த தம்பதியினர்..! நெல்லையில் சோகம்...
நீண்ட நாள் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்தும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் இருந்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
![20 ஆண்டுகளாக குழந்தையில்லாத ஏக்கம்...! விபரீத முடிவெடுத்த தம்பதியினர்..! நெல்லையில் சோகம்... Nellai A couple who made a tragic decision in longing to be childless 20 ஆண்டுகளாக குழந்தையில்லாத ஏக்கம்...! விபரீத முடிவெடுத்த தம்பதியினர்..! நெல்லையில் சோகம்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/dc8e2295c4551f52cf533175be6916ab1670688115810109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குழந்தை இல்லாத சோகம்:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பிள்ளையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராதிகா.இவர்களுக்கு திருமணம் முடிந்து 20 ஆண்டுகளான நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். இதனால் இருவரும் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் யாரும் திறக்காத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி ராதிகா கட்டிலில் சடலமாக கிடந்துள்ளார்.
விபரீத முடிவு:
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகம் மற்றும் ராதிகா ஆகிய இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் முதற்கட்ட விசாரணையில் நீண்ட நாள் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்தும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் இருந்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இருவரும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.. இருப்பினும் பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)