மேலும் அறிய

அறநிலையத்துறை சார்பில் மகாசிவராத்திரி 5 கோவில்களில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது - அமைச்சர் சேகர்பாபு

நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒரு இனிய சிவராத்திரியாக அமைவதற்கு அடிப்படை வசதிகளான கழிவு நீர் வசதி,  குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை வந்த  அமைச்சர் சேகர்பாபு சிவராத்திரி விழாவை மிக சிறப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் விழா நடத்துவதற்காக பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானம், திம்மராஜபுரம் பெருமாள்கோவில் பகுதியில் உள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது,  "கடந்த ஆண்டு நடைபெற்ற இந்துசமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் 5 திருக்கோவில்களில் மகா சிவராத்திரி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை அருணாசலஈஸ்வரர் திருக்கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கோவை பட்டீஸ்வரன் திருக்கோவில், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் என 5 இடங்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள்  கூடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்ய பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிவராத்திரியை கொண்டாடும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஆன்மீக பட்டிமன்றங்கள் ஆன்மீகம் சார்ந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நெல்லை பாளையங்கோட்டை  ஆயிரத்து அம்மன் கோவில் எருமை கடா மைதானத்தில் வைத்து சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஸ்டால்கள் அமைக்கப்படும். அந்த கோவிலின் பிரசாதங்கள், வரலாற்று புத்தகங்கள், முதல்வரால் அண்மையில் வெளியிடப்பட்ட 108 புதுப்பிக்கப்பட்ட திருக்கோவில் புத்தகங்கள், 13 போற்றி புத்தகங்கள், திருக்கோவிலின் பழைய வரலாற்றை விளக்குகின்ற இசைக்கருவிகள் போன்றவை இடம் பெற உள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒரு இனிய சிவராத்திரியாக அமைவதற்கு அடிப்படை வசதிகளான கழிவு நீர் வசதி,  குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக  நேரடி கள ஆய்வு செய்ய வந்துள்ளோம். எனவே மகா சிவராத்திரி சிறப்பான  முறையில் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டம் முழுக்க இருக்கும் சிவ பக்தர்கள் பங்கேற்பதற்காக ஒரே இடத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடை, ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் நிகழ்ச்சிகளை காண இவ்வளவு பெரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என  தெரிவித்தார்.

.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Embed widget