மேலும் அறிய

வெளிநாட்டில் வேலை...ரூ. 36 லட்சம்மோசடி.... ஏஜென்ட் வீட்டு முன் தர்ணா...!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேரை நியூஸிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல்.

குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேரை நியூஸிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 36 லட்சம் ரூபாய் கும்பல் மோசடி செய்தது. பணத்தை திரும்ப கேட்டு குமரி மாவட்ட ஏஜென்ட் வீட்டு முன் தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியை ஒட்டி உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேரிடம் சென்னை மண்ணடி பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் மாலதி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து குமரி மாவட்ட ஏஜென்டான ரெஞ்சித் ஆகியோர் சேர்ந்து கடந்த 2020 ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் கார்டன் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது என்றும் அதற்காக ஒரு ஆளுக்கு ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் மற்றும் பாஸ்போர்ட்களை வாங்கி உள்ளனர். விரைவில் விசா மற்றும் டிக்கெட் அனுப்பி தரப்படும் என்று கூறியவர்கள் ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து உள்ளனர். இதனையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் என்ன ஆனதென்று கேட்டபோது நியூசிலாந்து நாட்டில் தற்போது ஆட்கள் தேவை இல்லை என்றும் அதே வேலை அமெரிக்க நாட்டில் உள்ளது என்றும் அதற்கான விசா தங்களிடம் கைவசம் இருப்பதாக கூறி அதற்கு கூடுதலாக பணம் செலவாகும் என்றும் உடனே பணத்தை செலுத்தி மெடிக்கல் எடுத்தால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
 
இதனை நம்பியவர்கள் உடனடியாக பணத்தை திரட்டி கொண்டு சென்னை சென்று நபர் ஒருவருக்கு 60 ஆயிரம் வீதம் செலுத்தி மெடிக்கல் எடுத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் 50 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக டிக்கெட் கிடைத்து நீங்கள் அமெரிக்கா செல்லாம் என்று கூற அதனையும் நம்பி கொடுத்தவர்கள் 15 தினங்கள் சென்னையில் தங்கி இருந்து காத்து இருந்துள்ளனர். இறுதியாக இன்னும் இரண்டு தினங்களில் டிக்கெட் வந்துவிடும் நீங்கள் உங்களது ஊர்களுக்கு சென்று வெளிநாடு செல்ல தேவையான வேலைகளை செய்ய கூறி மீண்டும் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளனர். ஊருக்கு வந்த அவர்கள் இன்று டிக்கெட் வரும் நாளை வரும் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து காத்திருந்த வேளையில் எந்த அறிவிப்பும் வராமல் இருந்ததால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்து மீண்டும் சென்னைக்கு சென்று அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளனர் ஆனால் அலுவலகம் பூட்டி கிடந்துள்ளது. அவர்களது எண்களுக்கு தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.


வெளிநாட்டில் வேலை...ரூ. 36 லட்சம்மோசடி.... ஏஜென்ட் வீட்டு முன் தர்ணா...!
 
இதனையடுத்து டிராவல்ஸ் நடத்தி வரும் மாலதியின் வீடு அமைந்திருக்கும் வடபழனி பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த வீடும் பூட்டி கிடந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது மாலதி மற்றும் அவரது கணவர் அனைவரையும் ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளனர் என்றும் யாரும் அவர்களிடம் பணத்தை கொடுத்து இனிமேல் ஏமாறாதீர்கள் என்று கூறி உள்ளனர். இதனால் விரக்தியடைந்த 25 பேரும் குமரி மாவட்டம் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்படுவதற்கு காரணமான டிராவல்ஸுடன் பழக்கம் ஏற்படுத்தி விட்டு பணத்தை வாங்கிய குமரி மாவட்ட ஏஜென்டான திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ரெஞ்சித் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

வெளிநாட்டில் வேலை...ரூ. 36 லட்சம்மோசடி.... ஏஜென்ட் வீட்டு முன் தர்ணா...!
 
 
இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி மாலதியிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் அப்போது பணத்தை நாளை காலை 10 மணிக்குள் வழங்குவதாக கூறி இணைப்பை துண்டித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது தாங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடு மோகத்தில் இவர்களிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து மட்டுமே 36 லட்சம் ருபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget