மேலும் அறிய

குமரியில் ஜெபக்கூடத்தை காவிக்கொடியுடன் முற்றுகையிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு

நாகர்கோவில் அருகே ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு காவிக்கொடியுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்க முயன்ற 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு .

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு காவிக்கொடியுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்க முயன்ற 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரபாகுபதி கிராமத்தில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ ஜெபக்கூடம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெபக்கூடம் அமைந்துள்ள தெருவில் கடந்த 3 மாதங்களாக தெருவிளக்கு கேட்டு அப்பகுதியை சேர்ந்த 15வது வார்டு கவுன்சிலர் விஜயகல்யாணி என்பவரிடம் ஜெபக்கூடத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் புத்தளம் பேரூராட்சியில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திமுக வை சேர்ந்த பேரூர் செயலாளர் பிரதாப் சிங் என்பவரிடம் ஜெபக்கூடத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் 2வது நாளில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கோரிக்கை வைத்தும் தெரு விளக்கு அமைக்கவில்லை ஆனால் பிரதாப் சிங் 2 நாளில் தெருவிளக்கு அமைத்து கொடுத்துள்ளார் எனவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதில் ஜெபக்கூடத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி போஸ்டர்கள் ஒட்டியுள்ளதை கண்டித்தும், இப்பகுதியில் இப்படி ஒரு ஜெபக்கூடம் செயல்பட கூடாது எனக்கூறியும் கண்டன போஸ்டர்களை எதிர் தரப்பினர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

குமரியில் ஜெபக்கூடத்தை காவிக்கொடியுடன் முற்றுகையிட்ட  8 பேர் மீது  வழக்குப் பதிவு
 
இது ஒரு புறம் இருக்க கடந்த ஒரு வாரமாக ஜெபக்கூடத்தின் முன்பு அனுமதியின்றி ஜெபக்கூடம் நடைபெறுவதாக இந்து முன்னணி உட்பட சங்பரிவார் அமைப்பினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர். நேற்று அதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடையையும் மீறி ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களையும் தடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலான நிலையில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஜெபசிங் என்பவரது புகாரின் பேரில் இந்து முன்னணியினர், வார்டு கவுன்சிலர் உட்பட 8 பேர் மீது அத்துமீறி தகாத வார்த்தைகள் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் அரிய பெருமாள் விளையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர். தெருவிளக்கு தொடர்பான பிரச்சினை மதமோதலை ஏற்படுத்தும் விதமாக மாறிய விவகாரம் வீரபாகுபதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget