மேலும் அறிய

கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன - கனிமொழி எம்.பி

கூட்டுறவு சங்கங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த நிலை மாறி நல்ல நிலையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கேடயம், கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 1535 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 66 லட்சம் கடன் உதவியையும் வழங்கி பேசினார்.

கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன - கனிமொழி எம்.பி
 
அப்போது, "கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அந்த கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அதன்படி கிராமப்புற மக்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கஷ்டபடுவதை தவிர்க்கும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதனை பெற்று மக்கள் தொழில் செய்து முன்னேறும் வாய்ப்பை கூட்டுறவு சங்கம் உருவாக்கி தருகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அந்த திட்டம் நிறைவடையும் போது, மிகப்பெரிய மாற்றம் வரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 138.97 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.75 கோடியே 63 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1,379 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடன்களை இன்னும் அதிகரித்து வழங்க வேண்டும். இதனால் கிராமப்புற பெண்கள் நிலை மேம்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 575 முழுநேர ரேஷன்கடைகள், 275 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறது. உங்கள் பணி தொடரட்டும். அதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்" என்றார்.

கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன - கனிமொழி எம்.பி
 
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆியரத்து 732 விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் வைத்து இருந்த 57 ஆயிரத்து 192 பயனாளிகளுக்கு ரூ.160 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2,903 மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூ.93 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று 20 சதவீதம் சலுகை விலையில் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அனைத்து கடைகளிலும் மருந்துகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த நிலை மாறி நல்ல நிலையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது" என்றார்.
 
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன்(விளாத்திகுளம்), தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான நடுக்காட்டு ராஜா, துத்துக்குடி சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget