மேலும் அறிய

கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன - கனிமொழி எம்.பி

கூட்டுறவு சங்கங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த நிலை மாறி நல்ல நிலையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கேடயம், கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 1535 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 66 லட்சம் கடன் உதவியையும் வழங்கி பேசினார்.

கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன - கனிமொழி எம்.பி
 
அப்போது, "கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அந்த கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அதன்படி கிராமப்புற மக்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கஷ்டபடுவதை தவிர்க்கும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதனை பெற்று மக்கள் தொழில் செய்து முன்னேறும் வாய்ப்பை கூட்டுறவு சங்கம் உருவாக்கி தருகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அந்த திட்டம் நிறைவடையும் போது, மிகப்பெரிய மாற்றம் வரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 138.97 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.75 கோடியே 63 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1,379 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடன்களை இன்னும் அதிகரித்து வழங்க வேண்டும். இதனால் கிராமப்புற பெண்கள் நிலை மேம்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 575 முழுநேர ரேஷன்கடைகள், 275 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறது. உங்கள் பணி தொடரட்டும். அதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்" என்றார்.

கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன - கனிமொழி எம்.பி
 
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆியரத்து 732 விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் வைத்து இருந்த 57 ஆயிரத்து 192 பயனாளிகளுக்கு ரூ.160 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2,903 மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூ.93 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று 20 சதவீதம் சலுகை விலையில் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அனைத்து கடைகளிலும் மருந்துகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த நிலை மாறி நல்ல நிலையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது" என்றார்.
 
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன்(விளாத்திகுளம்), தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான நடுக்காட்டு ராஜா, துத்துக்குடி சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget