மேலும் அறிய

எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமையடைந்திருப்பேன் - கொலை செய்யப்பட்ட மாணவனின் தாய்

"எனது கணவர் ராணுவத்தில் சேர நினைத்தார் ஆனால் அவரால் முடியவில்லை, எனவே எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து நாட்டுக்காக உழைக்க வைக்க நினைத்தோம்”

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மகன் செல்வசூர்யா(17), பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட கோஷ்டி மோதலில் படுகாயமடைந்த செல்வசூர்யா 5 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர், மேலும் இச்சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்களான ஷீபா பாக்கியமேரி தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார், மேலும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு செய்ய பள்ளி மேலாண்மை குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்,


எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமையடைந்திருப்பேன் - கொலை செய்யப்பட்ட மாணவனின் தாய்

இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும், ஆசிரியர்கள் மற்றும் தனது மகனை கொலை செய்த மூன்று மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த மாணவனின் பெற்றோர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர், இது குறித்து உயிரிழந்த மாணவனின் தாய் உச்சிமகாளி கூறும்பொழுது, எனது மகன் நன்றாக படிப்பான் என்பதால் ஆங்கில வழியில் படிக்க வைக்க பணம் இல்லாததால் அரசு பள்ளியில் படிக்க வைத்தோம், பரீட்சை எழுத சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை, சம்பவம் நடந்து 2 மணிநேரமாக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்சுக்கு காத்துக்கொண்டிருந்துள்ளனர், ஆசிரியர்கள் காரில்தான் வந்துள்ளனர், எனது மகனை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் நினைத்திருந்தால் எனது மகனை காப்பாற்றியிருக்கலாம்.

2 மணிநேரம் தாமதமாக அம்பை அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்து உள்ளனர், அங்கு காதில் லேசான காயம் என சிகிச்சை அளித்து உள்ளனர், அப்போது மயக்கமடைந்த எனது மகனை பசங்கதான் அம்பைக்கும் அங்கிருந்து பாளை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்,


எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமையடைந்திருப்பேன் - கொலை செய்யப்பட்ட மாணவனின் தாய்

போலீசாரும் எனக்கு எந்த தகவல் சொல்லவில்லை. எனது மகன் யாரிடமும் வம்புக்கு போக மாட்டான் அந்த அளவுக்கு எங்கள் நிலைமை வறுமையில் உள்ளது,  எனது கணவர் ராணுவத்தில் சேர நினைத்தார் ஆனால் அவரால் முடியவில்லை, எனவே எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து நாட்டுக்காக உழைக்க வைக்க நினைத்தோம், ஆனால் எனது மகனை படுகொலை செய்து சித்ரவதை செய்து உள்ளனர்,  இனிமேல் வேறு எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது, எனவே அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் எனது மகனை கொன்ற மாணவர்கள் மீது தக்க தண்டனை கொடுக்க வேண்டும். அவனை கொடூரமாக அடித்துள்ளனர், எனது ஒரே மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன். வேறு எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது என வருத்தம் தெரிவித்தார்.

அரசும் இது போன்று கவனக்குறைவாக இருக்காமல் தங்கள் பிள்ளைபோல் நினைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமையடைந்திருப்பேன் - கொலை செய்யப்பட்ட மாணவனின் தாய்

இதுகுறித்து மாணவனின் உறவினர் மணிகண்டன் கூறும்போது, ”ஒரு ஆசிரியர் பார்க்கிறார் என்றால் அதனை அவர் தடுத்திருக்க வேண்டும், இச்சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவனையும் ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். அப்படியென்றால் இது திட்டமிட்ட கொலைதானே? அடித்தது பள்ளி மாணவர்கள் என்றாலும் இப்படி கொலை செய்யும் அளவுக்கு நடந்திருக்க கூடாது.  எனவே ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது போன்று ஒரு சம்பவம் வேறு எங்கேயும் இனி நடக்கக்கூடாது”  என்று தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Embed widget